June 29, 2025

Seithi Saral

Tamil News Channel

தங்கம் கடத்தலில் கைதான சுவப்னா சுரேசுக்கு நெஞ்சுவலி

1 min read

Chest pain for Swapna Suresh arrested for gold smuggling

7-9-2020
கேரள தங்க கடத்தல் விவகாரத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் சுவப்னா சுரேஷ் நெஞ்சு வலி காரணமாக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

தங்கம் கடத்தல்

ஐக்கிய அரசு அமீரகத்தில் இருந்து கேரளாவின் மணப்பாடில் உள்ள அந்நாட்டு தூதரக முகவரிக்கு வந்த பெட்டியில் 30 கிலோ தங்கம் மறைத்து வைக்கப்பட்டு இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. அவற்றை சுங்க இலாகா அதிகாரிகள் கைப்பற்றி விசாரணை நடத்தினார்கள்.

விசாரணைக்கு பின்னர் இந்த தங்கம் கடத்தல் தொடர்பாக 20க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். இதில் சுவப்னா சுரேசும் ஒருவர். அவர் திரிச்சூர் மாவட்டத்தின் விய்யூரில் உள்ள மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டு உள்ளார்.
சிறையில் இருந்த சுவப்னா சுரேசுக்கு நெஞ்சு வலி ஏற்பட்டு உள்ளது. இதனால் அவர் திரிச்சூரில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.