தமிழகத்தில் ஒரே நாளில் 5,776 பேருக்கு கொரோனா; 5,930 பேர் டிஸ்சார்ஜ்
1 min read
Corona for 5,776 people in one day in Tamil Nadu; 5,930 discharged
7-9-2020
தமிழகத்தில் ஒரே நாளில் 5,776 பேருக்கு கொரோனா தொற்று கண்டறிப்பட்ட நிலையில் 5,930 பேர் குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.
கொரோனா
தமிழகத்தில் கொரோனா பரவல் பற்றி தினமும் மாலையில் தமிழக சுகாதாரத்துறை தகவலை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் இன்று மாலை வெளியிட்ட தகவல்கள் வருமாற:-
தமிழகத்தில் இன்று( திங்கட்கிழமை ) ஒரே நாளில் மட்டும் 5,776 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு உள்ளது. இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4,69,256ஆக உயர்ந்துள்ளது.
இன்று மட்டும் கொரோனாவுக்கு 89 பேர் இறந்துள்ளனர். இவர்களையும் சேர்த்து கொரோனாவுக்கு இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 7,925 ஆக அதிகரித்துள்ளது.
டிஸ்சார்ஜ்
கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் இன்று மட்டும் 5,930 பேர் குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இவர்களையும் சேர்த்து கொரோவில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 4,10,116 ஆக உயர்ந்துள்ளது.
சென்னையில் மட்டும் இன்று 949 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனால் சென்னையில் மொத்தம் 1,42,603 பேர் கொரோனாவால் பாதிக்கப் பட்டனர்.