கொரோனா தடுப்பூசியை இந்த வாரம் கொண்டுவருவோம்- ரஷ்யா அறிவிப்பு
1 min read
We will bring the corona vaccine this week- Russia announcement
7-9-2020
கொரோனா தடுப்பூசியான ‘ஸ்புட்னிக்-5’ என்ற மருந்தை இந்த வாரம் பொது மக்கள் பயன்பாட்டுக்கு வருவோம் என்று ரஷ்ய சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.
கொரோனா தடுப்பூசி
கொரோனாவுக்கு தடுப்பூசியை கண்டு பிடிக்கும் முயற்சியில் உலக நாடுகள் ஈடுபட்டு வருகின்றன. இந்தியா உள்பட சில நாடுகள் தடுப்பூசியை கண்டறிந்து விட்டன. ஆனால் அந்த மருந்தை மனிதர்களுக்கு போட்டு பரிசோதித்து வருகின்றன. அந்த மருந்தால் பக்க விளைவுகள் ஏதும் இல்லை என்று திட்டவட்டமாக அறிந்த பின்னரே அந்த தடுப்பூசிக்கு உலக சுகாதார அமைப்பு அங்கீகாரம் கொடுக்கும். அடுத்து ஆண்டு இறுதி வரை கொரோனா தடுப்பூசி பயன்பாட்டுக்கு வர சாத்தியம் இல்லை என்று உலக சுகாதார அமைப்பு சமீபத்தில் அறிவித்தது.
ரஷ்யா
உலக சுகாதார அமைப்பு இப்படி கூறி வந்தாலும் கடந்த மாதமே ரஷ்யா கொரோனாவுக்கு தாங்கள் மருந்து கண்டுபிடித்து விட்டோம் என்று அறிவித்தது.
ரஷ்யாவின் காமாலியா தொற்றுநோய்
தடுப்பு நுண் அறிவியல் ஆய்வு நிறுவனம் ரஷ்யாவின் நேரடி முதலீட்டு நிறுவனத்துடன் இணைந்து தடுப்பு மருந்தைத் தயாரித்துள்ளது. ‘ஸ்புட்னிக்-5 எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த மருந்து கிளினிக்கல் பரிசோதனையில் 3ம் கட்டத்துக்குச் செல்லவில்லை’ எனக் கூறப்பட்டது.
இருப்பினும் மருந்தின் மீதான நம்பகத்தன்மையை மக்களுக்குத் தெரியப்படுத்தும் வகையில் தனது மகளுக்கே இந்த மருந்தைச் செலுத்தினார் ரஷ்ய அதிபர் புதின். ஆனால், உலக ஆய்வாளர்கள் மத்தியில் ரஷ்யா கண்டுபிடித்துள்ள ஸ்புட்னிக்-5 தடுப்பு மருந்து மீது முழுமையான நம்பிக்கை வராததால் அதைத் தொடர்ந்து விமர்சித்து வந்தனர்.
ஆனாலும் எந்த விமர்சனத்தையும் கண்டு கொள்ளாத ரஷ்யா தங்களது தடுப்பூசி மருந்தை மூன்றாம் கட்ட சோதனைகளுக்கு உட்படுத்தியது. மேலும் தங்கள் தடுப்பூசி அனைத்து கட்ட சோதனைகளையும் வென்றுவிட்டதாகவும், ஐரோப்பிய நாடுகளின் கேள்விகளுக்கும் விடையளித்துவிட்டோம் என்று சில நாட்களுக்கு முன்னர் ரஷ்யா அறிவித்தது.
இந்த வாரம்
இந்த நிலையில்,ரஷ்யாவின் சுகாதாரத் துறை அதிகாரிகள், ‘ஸ்புட்னிக்-5 தடுப்பூசிக்கு சுகாதாரத் துறை ஒப்புதழ் வழங்கவுள்ளது. இந்த வாரம் அதாவது வரும் 13-ந் தேதிக்குள் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக வெளியிடப்படும்’ என்று அறிவித்துள்ளனர்.