June 29, 2025

Seithi Saral

Tamil News Channel

சிறிய வியாபாரிகள் பயன்பெறும் வகையில் மத்திய அரசு புதிய திட்டம்

1 min read

Federal Government New Plan to Benefit Small Businesses

8-9-2020

நடுத்தர மக்கள் மற்றும் சிறிய வியாபாரிகள் பயன்பெறும் வகையில் மத்திய அரசு புதிய திட்டத்தை விரைவில் அறிவிக்க இருக்கிறது.

ஊரடங்கு

கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மத்திய மாநில அரசுகள் நிவாரணம் அளித்தனா. மத்திய அரசு கடந்த மே மாதம் தற்சார்பு கொள்கை அடிப்படையில் 20 லட்சம் கோடி ரூபாய்க்கு ஊக்கச் சலுகை திட்டத்தை அறிவித்தது.

இப்பபோது மேலும் ஒரு ஊக்கச் சலுகை திட்டத்தை மத்திய அரசு அறிவிக்க இருக்கிறது.
இது பற்றி அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
மத்திய அரசு விரைவில், ‘ஊக்கச் சலுகை – 2’ என்ற திட்டத்தை அறிமுகப்படுத்த இருக்கிறது. இந்தத் திட்டம் இதுவரை ஊதியம் பெறாத நடுத்தர பிரிவு மக்கள் மற்றும் சிறு வியாபாரிகள் பயன் பெறும் வகையில் உருவாக்கப்பட்டு உள்ளது.
பல நிறுவனங்களில் பணியாற்றிய ஊழியர்கள் இந்த ஊரடங்கால் சம்பளம் பெறாத நிலை உள்ளது. மேலும் சுய தொழில் செய்யும் நடுத்தர மக்களும் தொழிலை நடத்த முடியாமல் கஷ்டத்தில் உள்ளனர்.
அவர்கள் பயன்பெறும் வகையில் ஊக்கச் சலுகைகள் வழங்கப்படும்.

பொருளாதார வளர்ச்சி

நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில், மொத்த உள்நாட்டு உற்பத்தி, கடுமையான பின்னடைவை சந்தித்துள்ளது.
இரண்டாவது காலாண்டிலும், இதே நிலை தொடரும் என, மதிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில், இரண்டாவது ஊக்கச் சலுகை திட்டம் மூன்றாவது காலாண்டில், ஓரளவு பொருளாதார வளர்ச்சிக்கு உதவும் என அரசு எதிர்ப்பார்க்கிறது.
இவ்வாறு அந்த அதிகாரி கூறினார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.