தென்காசியில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வாலிபர் கைது
1 min read
Man arrested for sexually abusing girl in Tenkasi
11-9-2020
தென்காசியில் 10 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் அதே பகுதியை சேர்ந்த வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
பாலியல் வன்கொடுமை
தென்காசி கீழவாலியன் சொத்தை பகுதியை சேர்ந்தவர் கருப்பசாமி. இவரது மகன் கார்த்திக் (வயது 20). இவர் தென்காசியில் உள்ள ஒரு கோழி கடையில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார்.
இவர் அந்த பகுதியில் உள்ள 10 வயது சிறுமியை ஏமாற்றி ஒரு வீட்டிற்குள் அழைத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. அந்த சிறுமி கதறி கூச்சலிட்டுள்ளார். சிறுமியின் கூச்சல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் ஓடி வந்து பார்த்த போது கார்த்திக், அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.
கைது
சிறுமி அழுது கொண்டே நடந்ததை கூறியுள்ளார். இதுபற்றி அந்த சிறுமியின் தாய் தென்காசி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து கார்த்திக்கை போக்சோ சட்டத்தில் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்