June 29, 2025

Seithi Saral

Tamil News Channel

தமிழகத்தில் ஒரே நாளில் 6,227 பேர் கொரோனாவில் இருந்து குணம் அடைந்தனர்

1 min read

n Tamil Nadu, 6,227 people recovered from corona in one day

12-9-2020

தமிழகத்தில் இன்று மட்டும் 6,227 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணம் அடைந்துள்ளனர்.

கொரோனா

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நிலவரத்தை தினமும் தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டு வருகிறது. அதன்படி இன்று (சனிக்கிழமை) வெளியிட்ட தகவல்கள் வருமாறு:-

தமிழகத்தில் இன்று(சனிக்கிழமை) ஒரே நாளில் 5,496 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டு உள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4,97,066 ஆக உயர்ந்துள்ளது.

கொரேனா பாதிக்கப்பட்டவர்களில் இன்று மட்டும் 6,227 பேர் குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இவர்களையும் சேர்ந்து கொரோனாவில் இருந்து குணமானவர்களின் மொத்த எண்ணிக்கை 4 லட்சத்து 41 ஆயிரத்து 649 ஆக உள்ளது.

76 பேர் சாவு

தமிழகத்தில் இன்று( சனிக்கிழமை) மட்டும் கொரோனாவால் 76 பேர் இறந்தனர். இவர்களையும் சேர்த்து தமிழகத்தில் கொரோனாவுக்கு மொத்தம் 8,307 பேர் இறந்துள்ளனர்.
தற்போது 47,110 பேர் பல்வேறு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

சென்னையில்

சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில் 978 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டு உள்ளது. சென்னையைத் தவிர கோவையில் 428 பேருக்கும், திருவள்ளூரில் 299 பேருக்கும், சேலத்தில் 289 பேருக்கும், செங்கல்பட்டில் 267 பேருக்கும், திருப்பூரில் 256 பேருக்கும், கடலூரில் 253 பேருக்கும், விழுப்புரத்தில் 175 பேருக்கும், நாகப்பட்டினத்தில் 153 பேருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது.

நெல்லை

நெல்லை மாவட்டத்தில் 108 பேருக்கும், தென்காசி மாவட்டத்தில் 81 பேருக்கும் தூத்துக்குடி மாவட்டத்தில் 83 பேருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டு உள்ளது.

இன்று சென்னையில் 17 பேரும், சேலத்தில் 8 பேரும், காஞ்சிபுரத்தில் 7 பேரும், கோவையில் 6 பேரும், செங்கல்பட்டு, கடலூர், வேலூரில் தலா 4 பேரும், தென்காசி, திருவள்ளூர், திருவண்ணாமலையில் தலா 3 பேரும், ஈரோடு, கிருஷ்ணகிரி, நாமக்கல், திருப்பத்தூரில் தலா 2 பேரும், திண்டுக்கல், நாகப்பட்டினம், நீலகிரி, ராணிப்பேட்டை, தேனி, தூத்துக்குடி, திருநெல்வேலி, திருப்பூர், திருச்சியில் தலா ஒருவரும் கொரோனாவுக்கு இறந்துள்ளனர்.

இன்று ஒரே நாளில் சென்னையில் 1,215 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். கடலூரில் 612 பேரும், கோவையில் 495 பேரும், திருவள்ளூரில் 342 பேரும், திருவண்ணாமலையில் 235 பேரும், செங்கல்பட்டில் 233 பேரும், சேலத்தில் 225 பேரும், திருவாரூரில் 222 பேரும் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.