இந்தியாவில் கொரோனா தடுப்பூசியின் முதல் கட்ட பரிசோதனையில் வெற்றி
1 min read
Success of first phase trial of corona vaccine in India
12-9-2020
கொரோனா தடுப்பூசி முதல்கட்ட சோதனையில் பாரத் பயோ டெக் நிறுவனம் வெற்றிபெற்றுள்ளது.
பரிசோதனை
இந்தியாவில் உள்ள பாரத் பயோடெக் சி
நிறுகூனம் கொரோனாவுக்கான தடுப்பூசி கண்டுபிடிக்கும் பணியி் இறங்கி உள்ளது. இந்நிறுவனமும் ஐ.எம்.சி.ஆர்., எனப்படும் இந்திய மருத்து கவுன்சிலும் இணைந்து கொரோன தடுப்பூசி மருந்தாக கோவாக்சினை தயாரித்துள்ளன. இம்மருந்து நாடு முழுவதும் 12 பரிசோதனை மையங்களில் பரிசோதிக்கப்பட்டு வருகிறது.
எதிர்ப்பு சக்தி
இந்தநிலையில் 20 செம்முகக் குரங்குகளை பயன்படுத்தி பரிசோதனை நடத்தப்பட்டது. 20 குரங்குகளும் நான்கு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது. அனைத்து குரங்குகளிடமும் நடத்தப்பட்ட முதற்கட்ட பரிசோதனையில் தடுப்பூசியானது கொரோனாவுக்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இரண்டாவது கட்ட தடுப்பூசி பரிசோதனைக்கும் பாரத் பயோடெக் நிறுவனத்திற்கு மத்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு ஏற்கனவே அனுமதி வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.