June 29, 2025

Seithi Saral

Tamil News Channel

போலீஸ் அடித்ததாக கூறி சிவகிரியில் ஆடு மேய்க்கும் தொழிலாளி விஷம் குடித்தார்

1 min read

A shepherd worker in Sivagiri drank poison after being beaten by police

14-9-2020

போலீஸ் அடித்ததாக கூறி சிவகிரியில் ஆடு மேய்க்கும் தொழிலாளி விஷம் குடித்தார்.அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

ஆடு மேய்க்கும் தொழிலாளி

தென்காசி மாவட்டம் சிவகிரி வ.உ.சி.வடக்குத் தெருவைச் சேர்ந்தவர் அஜீத்குமார் (வயது 22). இவர் மாடு மேய்க்கும் தொழில் செய்து வருகிறார். இவர் மீது கொலை முயற்சி வழக்கு உள்ளிட்ட வழக்குகள் உள்ளது.

சம்பவத்தன்று இரவு அஜீத்குமார் கடைக்கு சென்று கொண்டிருந்தர். அப்போது சிவகிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் அவரிடம் விசாரித்ததாக கூறப்படுகிறது.

விஷம் குடித்தார்

அதன்பின் வீட்டுக்கு வந்த அஜித்குமார் மனம் உடைந்து காணப்பட்டார். தன்னை போலீஸ் இன்ஸ் பெக்டர் அடித்துவிட்டதாக கூறகொண்டே இருந்தார். அவர் தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்தார்.
பின்னர் அஜித்குமார் தான் வாங்கி வைத்திருந்த விஷத்தை குடித்துவிட்டார்.இதனைப் பாரத்த வீட்டில் இருந்தவர்கள் அவரை மீட்டு தென்காசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.