June 29, 2025

Seithi Saral

Tamil News Channel

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5, 777 பேர் கொரோனாவில் இருந்து மீண்டனர்

1 min read

In Tamil Nadu, 5,777 people recovered from Corona in a single day today

14-9-2020

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,799 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.

கொரோனா

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு பற்றி தமிழக சுகாதாரத்துறை இன்று மாலை வெளியிட்ட தகவல்கள் வருமாறு:-

தமிழகத்தில் இன்று( திங்கட்கிழமை ) மட்டும் 5,752 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதில், 5,742 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள். 10 பேர் வெளிமாநிலம் மற்றும் வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள். இவர்களையும் சேர்த்து தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 5,08,511 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் இன்று மட்டும் 170 ஆய்வகங்களில் 80,123 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இதனுடன் சேர்த்து, இதுவரை 59 லட்சத்து 68 ஆயிரத்து 209 மாதிரிகள் சோதனையிடப்பட்டன.

டிஸ்சார்ஜ்

இன்று கொரோனா உறுதியானவர்களில், 3,153 பேர் ஆண்கள். 2,599 பேர் பெண்கள். கொரோனா பாதித்த, ஆண்களின் மொத்த எண்ணிக்கை 3,06,354. பெண்களின் எண்ணிக்கை 2,02,128. மூன்றாம் பாலினத்தவர்களின் எண்ணிக்கை 29 .
கொரோனா பாதித்தவர்களில் 5,777 பேர் இன்று குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இவர்களையும் சேர்த்து கொரோனாவில் இருந்து விடுபட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 லட்சத்து 53 ஆயிரத்து 165 ஆக உள்ளது.

53 பேர் சாவு

தமிழகத்தில் இன்று மட்டும் கொரோனாவுக்கு53 பேர் இறந்தனர். இதில் 34 பேர் அரசு ஆஸ்பத்திரிகளிலும் 19 பேர் தனியார் ஆஸ்பத்திரிகளிலும் அனுமதிக்கப்பட்டவர்கள். இவர்களையும் சேர்த்து தமிழகத்தில் கொரோவுக்கு மொத்தம் 8,434 பேர் இறந்துள்ளனர்.
தற்போது 46,912 பேர் பல்வேறு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதில் 12 வயது வரை உள்ள சிறுவர்-சிறுமிகள் 22 ஆயிரத்து 6 பேர் உள்ளனர். 13 முதல் 60 வரை உள்ளவர்கள் 4 லட்சத்து 20 ஆயிரத்து 043 பேர் உள்ளனர். 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் 66 ஆயிரத்து 462 பேர்.

சென்னையில்…

சென்னையில் மட்டும் இன்று 991 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டு உள்ளது. இதன் மூலம் சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,49,583 ஆகும். சென்னையை தவிர இன்று, கோவையில் 498 பேருக்கும், செங்கல்பட்டில் 364 பேருக்கும், சேலத்தில் 297 பேருக்கும், கடலூரில் 296 பேருக்கும், திருவள்ளூரில் 294 பேருக்கும், திருவண்ணாமலையில் 222 பேருக்கும், திருப்பூரில் 192 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 167 பேருக்கும் திருநெல்வேலியில் 72 பேருக்கும் தென்காசியில் 80 பேருக்கும், தூத்துக்குடியில் 73 பேருக்கும் இன்று கொரோனா கண்டறியப்பட்டு உள்ளது.

சென்னையில் இன்று 23 பேரும், திருவள்ளூரில் 4 பேரும், செங்கல்பட்டு, கோவை, கடலூர், ஈரோடு, சேலத்தில் தலா 3 பேரும், தஞ்சாவூரில் 2 பேரும், காஞ்சிபுரம், கன்னியாகுமரி, கரூர், மதுரை, நாகப்பட்டினம், நாமக்கல், ராணிப்பேட்டை, திருவாரூர், திருப்பூரில் தலா ஒருவரும் கொரோனாவுக்கு இறந்துள்ளனர்.

சென்னையில் இன்று மட்டும் 940 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். சென்னயைில் இதுவரை மொத்தம் 1,36,155 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.
கோவையில் இன்று 448 பேரும், கடலூரில் 435 பேரும், திருவள்ளூரில் 330 பேரும், செங்கல்பட்டில் 323 பேரும், மதுரையில் 287 பேரும், திருவண்ணாமலையில் 278 பேரும், சேலத்தில் 233 பேரும், ராணிப்பேட்டையில் 145 பேரும், விழுப்புரத்தில் 144 பேரும் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.