June 28, 2025

Seithi Saral

Tamil News Channel

இந்தியாவில் ஒரே நாளில் 77,513 பேர் கொரோனாவில் இருந்து குணம் அடைந்தனர்

1 min read

n India, 77,513 people recovered from corona in one day

14-9-2020

இந்தியாவில் கொரோனா பாதிப்பில் இருந்து நேற்று ஒரே நாளில் 77,513 பேர் குணம் அடைந்துள்ளனர்.

கொரோனா

இந்தியாவில் கொரோனா பரவல் இன்னும் கட்டுக்குள் வரவில்லை. இந்திய அளவில் கொரோனா பற்றிய விவரங்களை மத்திய சுகாதார அமைச்சகம் தினமும் காலையில் வெளியிட்டு வருகிறது. அதன்படி இன்று( திங்கட்கிழமை) காலை வெளியிட்ட தகவல்கள் வருமாறு:-

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் அதாவது நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஒரே நாளில் 92,071 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு உள்ளது. இதனால் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 48 லட்சத்து 46 ஆயிரத்து 428 ஆக உயர்ந்தது.

குணம் அடைந்தனர்

நேற்று ஒரே நாளில் 1,136 பேர் கொரோனாவால் இறந்தனர். இதனால் இதுவரை கொரோனாவுக்கு 79,722 பேர் இறந்தனர்.
கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் நேற்று ஒரே நாளில் 77,513 பேர் குணம் அடைந்துள்ளனர். இதுவரை 37 லட்சத்து 80 ஆயிரத்து 108 பேர் குணம் அடைந்துள்ளனர்.
தற்போது 9 லட்சத்து 86 ஆயிரத்து 598 பேர் பல்வேறு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.