June 28, 2025

Seithi Saral

Tamil News Channel

சிவகிரி அருகே மது கேட்டு சாலை பணியாளர் கொலை; 4 பேர் கைசுது

1 min read

Road worker killed for drinking alcohol near Sivagiri; 4 people arrested

14-9-2020

சிவகிரி அருகே மது கேட்டு சாலைப்பணியாளரை கல்லால் அடித்து கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

சாலை பணியாளர்

தென்காசி மாவட்டம் சிவகிரி மெயின் ரோட்டைச் சேர்ந்தவர் வெள்ளத்துரை மகன் சரவணக்குமார் (வயது 41). சாலைப்பணியாளர். சம்பவத்தன்று இரவு இவரும் இவரது அண்ணன் சீனிச்சாமியும் ( 44) ஊருக்கு வடக்கே சென்று கொண்டிருந்தனர்.
அப்போது அந்த வழியே இரண்டு சைக்கிள்களில் 4 வாலிபர்கள் வந்தனர். அவர்கள் சரவணக்குமாரிடம் சரக்கு(மது) வாங்கித் தரும்படி கேட்டனர்.

கொலை
இதில் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. சண்டை முற்றவே 4 பேரும் சேர்ந்து சரவணக்குமாரை அடித்து, உதைத்து கல்லால் தாக்கிவிட்டு சென்றுவிட்டனர். இதில் படுகாயமடைந்த சரவணக்குமார் சிவகிரியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டார்.

அதன்பின் மேல்சிகிச்சைக்காக மதுரை தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டர். பின்னர் திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டார். ஆனால் அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி சரவணகுமார் பரிதாபமாக இறந்தார்.

கைது

இந்த சம்பவம் குறித்து சிவகிரி போலீசில் சீனிச்சாமி புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினார். விசாரணையில் சரவணக்குமாரை கல்லால் அடித்து கொலை செய்தது சொக்கநாதன்புதுர்ரைச் சேர்ந்த விக்னேஷ், (27), சந்திர பிரகாஷ், (21), ராஜா (19), ராமசாமி (22) என தெரியவந்தது.
ஆவர்கள் 4 பேரையும் போலீசார் கைது செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொலை செய்யப்பட்ட சாலைப்பணியாளர் சரவணக்குமாருக்கு ஜோஸ்மின் (38) என்ற மனைவியும், அனுசுயா (18) என்ற மகளும், சாரதி (15) என்ற மகனும் உள்ளனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.