இந்தியாவில் ஒரே நாளில் 90,123 பேருக்கு கொரோனா
1 min read
Corona for 90,123 people one day in India
16-9-2020
இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 90,123 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு உள்ளது.
கொரோனா
இந்தியாவில் எவ்வளவோ நடவடிக்கை எடுத்தும் கொரோனா இன்னும் கட்டுப்பாட்டுக்குள் வரவில்லை. கொரோனா நிலவரத்தை தினமும் காலையில் மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டு வருகிறது. அதேபோல் இன்று( புதன்கிழமை) வெளியிட்ட தகவல்கள் வருமாறு:-
இந்தயாவில் நேற்று (செவ்வாய்க்கிழமை) ஒரே நாளில் 90,123 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு உள்ளது. இதனால் கொரோனா பாதித்தவர்களின் தொத்த எண்ணிக்கை 50 லட்சத்தை 20 ஆயிரத்து 360 ஆக உயர்ந்தது.
டிஸ்சார்ஜ்
கொரோனாவால் பாதிப்புக்குள்ளானவர்களில் நேற்று மட்டும் 1,290 பேர் இறந்துள்ளனர். இதனால் இதுவரை கொரோனாவுக்கு இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 82,066 ஆக உயர்ந்தது.
கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் நேற்று மட்டும 82,961 குணம் அடைந்து டிஸ்சார்ஜ் ஆனார்கள். இவர்களையும் சேர்த்து டிஸ்சார்ஜ் ஆனவர்களின் மொத்த எண்ணிக்கை 39 லட்சத்து 42 ஆயிரத்து361 ஆக உயர்ந்துள்ளது.
தற்போது 9 லட்சத்து 95 ஆயிரத்து 933 பேர் பல்வேறு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இந்தியா முழுவதும் நேற்று ஒரே நாளில் 11,16,842 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டன. இவைகளுடன் சேர்த்து இதுவரை 5,94,29,115 மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளன.
மேற்கண்ட தகவலை மத்திய சுகாதார அமைச்சம் தெரிவித்துள்ளது.