June 29, 2025

Seithi Saral

Tamil News Channel

நெல்லை, தென்காசி, தூத்துக்குடியில் கொரோனா நிலவரம்

1 min read

Corona situation in Nellai, Tenkasi and Thoothukudi

16-9-1010

தமிழகத்தில் கொரோனா நிலவரத்தை தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டது.

நெல்லை

நெல்லை மாவட்டத்தில் இன்று (புதன்கிழமை ) ஒரே நாளில் 118 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு உள்ளது.
இதனால் மொத்த எண்ணிக்கை 11429 ஆக அதிகரித்தது.

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் இன்று மட்டும்130 பேர் குணமாகி டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். இவர்களையும் சேர்த்து இதுவரை மாெத்தம் 10183 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். தற்போது மொத்தம் 1054 பேர் மட்டுமே சிகிச்சையில் உள்ளனர்.
நெல்லை மாவட்டத்தில் இன்று ஒருவர் கொரோனாவுக்கு பலி உள்ளனர் இதனால் கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 192 ஆக உயர்ந்துள்ளது.

தென்காசி

தென்காசி மாவட்டத்தில் இன்று ஒரே நாளில்70 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனால் மொத்த எண்ணிக்கை 6467 ஆக அதிகரித்தது. இன்று 136 பேர் குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால் இதுவரை மொத்தம் 5800 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.
தற்போது தென்காசி மாவட்டத்தில் 545 பேர் மட்டுமே சிகிச்சையில் உள்ளனர்.
இன்று இந்த மாவட்டத்தில் கொரோனாவுக் ஒருவர் இறந்துள்ளார். இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 122 ஆக உள்ளது.

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 85 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனால் மொத்த எண்ணிக்கை 12543 ஆக அதிகரித்தது. இன்று 40 பேர் குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இவர்களையும்சேர்த்து இதுவரை மொத்தம் 11660 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். தற்போது 764 பேர் மட்டுமே சிகிச்சையில் உள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 119 ஆக உள்ளது. இன்று இறப்பு இல்லை.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.