மத்திய மந்திரி நிதின் கட்கரி, சி.பி.ராதா கிருஷ்ணனுக்கு கொரோனா
1 min read
Corona to Union Minister Nitin Gadkari and CP Radha Krishnan
16-9-2020
மத்திய மந்திரி நிதிக் கட்காரி மற்றும் தமிழக பாரதீய ஜனதா முன்னாள் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.
நிதின் கட்காரி
இந்தியாவில் இன்னும் கொரோனாவை கட்டுப்படுத்த முடியவில்லை. இது சாதாரண மக்கள் முதல் பெரிய தலைவர்கள் வரை பாகுபாடின்றி தாக்கி வருகிறது.
இப்போது மத்திய மந்திரி நிதின் கட்கரிக்கு கொரோரோனா தொற்று கண்டறிப்பட்டு உள்ளது. இது குறித்து அவர் டுவிட்டரில் பதிவிட்டு இருப்பதாவது:-
முன்னெச்சரிக்கை
எனது உடல் பலவீனமாக இருப்பதாக உணர்ந்து மருத்துவரிடம் சோதனை மேற்கொண்டேன். அப்போது எனக்கு கோவிட்-19 பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் பாசிட்டிவ்வாக வந்துள்ளது. இதனையடுத்து நான் என்னை தனிமைப்படுத்தி கொண்டேன்.
என்னுடன் தொடர்பு கொண்டவர்கள் அனைவரும் பத்திரமாக இருக்க வேண்டும். மற்றும் முன்னெச்சரிக்கை வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு நிதின் கட்கரி பதிவிட்டுள்ளார்.
சி.பி.ராதா கிருஷ்ணன்
பாரதீய ஜனதாவின் மூத்த தலைவரும் முன்னாள் தமிழக தலைவருமான சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு கொரோனா தொற்று இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து அவர் தனது முகநூல் பதிவில், ‘நான் கொரோனா பரிசோதனை செய்து கொண்டேன். அதன் முடிவு இன்று காலை வெளியானது. அதில் எனக்கு வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்துள்ளேன். உங்கள் பிரார்த்தனைகள் மற்றும் ஆசீர்வாதங்கள் மற்றும் வாழ்த்துக்களால் மிக விரைவில் குணமடைந்து இயல்பு நிலைக்கு திரும்புவேன். நான் விரைவில் குணமடைய வாழ்த்திய அனைத்து நல் உள்ளங்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றி’ எனத் தெரிவித்துள்ளார்.