தமிழகத்தில் 4 பி.எட். கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு தடை
1 min read
4 B.Ed. colleges Prohibition of student admission in Tamil nadu
17-9-2020
தமிழகத்தில் 2020-21 கல்வியாண்டில் 4 அரசு பிஎட் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு தற்காலிக தடை விதித்து தேசிய ஆசிரியர் கல்வி குழுமம் உத்தரவிட்டு உள்ளது.
இது தொடர்பாக தேசிய ஆசிரியர் கல்வி குழுமம்( என்.சி.டி.இ) அந்த குழுமம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
மாணவர் சேர்க்கைக்கு தடை
சென்னை மெரினாவில் உள்ள லேடி வெலிங்டன் கல்லூரி போதிய ஆவணங்களை சர்ப்பிக்கவில்லை.
புதுக்கோட்டை அரசு பி.எட். கல்லூரியில் 16க்கு பதில் 12 ஆசிரியர்கள் தான் உள்ளனர்
குமாரபாளையம் அரசு கல்லூரியில் 16 ஆசிரியர்களுக்கு பதில் 9 பேர் தான் உள்ளனர்.
திருமயம் அரசு பி.எட். கல்லூரி முதல்வர் ஆசிரியர்கள் என்.சி.டி.இ. விதிகள் படி நியமனம் செய்யப்படவில்லை.
இதனால், இக்கல்லூரிகளில் தற்காலிகமாக, 2020-21 கல்வியாண்டில் மாணவர் சேர்க்கைக்கு தடை விதிக்கப்படுகிறது.
3 மாதத்தில்…
குறைபாடுகளை சரி செய்து 3 மாதத்தில் ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும் அதுவரை மாணவர் சேர்க்கைக்கு தடை விதிக்கப்படுகிறது.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.