June 29, 2025

Seithi Saral

Tamil News Channel

கண்ணாடி அணிந்தால் கொரோனா தாக்காதா?

1 min read

Does wearing nose glasses affect the corona?

18-9-2020

மூக்கு கண்ணாடி அணிந்தால், கொரோனாவில் இருந்து பாதுகாப்பு கிடைக்கலாம் என்று விஞ்ஞானிகள் ஆய்வில் கண்டுபிடித்துள்ளனர்.

கொரோனா பற்றிய ஆய்வு

உலக நாடுகளை சின்னாபின்னமாக்கி வரும் கொரோனாவுக்கு பல்வேறு நாடுகள் மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்கி உள்ளன. அதேபோல் கொரோனா பரவல் பற்றிய ஆராய்ச்சியும் நடத்த வண்ணம் உள்ளது.

சீனாவில் உள்ள சுய்ஜோ ஜெங்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த கொரோனா நோயாளிகளை கொண்டு விஞ்ஞானிகள் ஒரு ஆய்வை நடத்தினார்கள். இந்த ஆய்வை மேற்கொண்டவர்களில் சீனாவின் நாஞ்சாங் பல்கலைக்கழகத்தின் இரண்டாவது இணைந்த மருத்துவமனை ஆராய்ச்சியாளர்களும் அடங்குவர்.
இவர்கள் தங்களது ஆய்வு முடிவை ஜாமா கண் மருத்துவ இதழில் வெளியிட்டுள்ளனர்.
அந்த ஆய்வு கூறியிருப்பதாவது:-

மூக்கு கண்ணாடி

நீண்ட நேரம் மூக்கு கண்ணாடி அணிபவர்கள் அசாதாரணமானவர்கள் . அவர்களுக்கு கொரோனாவில் இருந்து பாதுகாப்பு கிடைக்கிறது.
ஒரு நாளில் 8 மணி நேரம் தொடர்ந்து கண்ணாடி அணிகிறவர்களுக்கு கொரோனாவில் இருந்து பாதுகாப்பு கிடைக்கிறது.
கண்ணாடி அணிவதால், அவர்கள் கண்களை அடிக்கடி தொடுகிற வாய்ப்புக்கு அது ஒரு தடையாக அமைந்திருக்கிறது. இதை உறுதி செய்வதற்கு மேற்கொண்டு ஆய்வுகள் தேவைப்படுகின்றன.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இது குறித்து அமெரிக்காவின் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் தொற்றுநோயியல் நிபுணர் லிசா மராகசிஸ் கருத்து கூறும்போது, “இந்த கண்டுபிடிப்புக்கு மாற்று விளக்கங்கள் இருக்கலாம். இந்த ஆய்வு முடிவு, கொரோனாவில் இருந்து காக்க, கண்களை பாதுகாக்க பொதுவெளியில் வரும்போது கண்ணாடியோ, ஷீல்டோ அணிய வேண்டும் என்ற முடிவுக்கு வர தூண்டுகிறது என்றார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.