June 28, 2025

Seithi Saral

Tamil News Channel

தமிழகத்தில் ஒரே நாளில் 5,525 பேர் கொரோனாவில் இருந்து குணம் அடைந்தனர்

1 min read

In Tamil Nadu, 5,525 people recovered from corona one day

18-9-2020

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,525 பேர் குணம் அடைந்தனர்.

கொரோனா

தமிழகத்தில் கொரோனா நிலவரத்தை தினமும் மாலையில் தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டு வருகிறது. அதன்படி இன்று மாலை வெளியிட்ட தகவல்கள் வருமாறு:-

தமிழகத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) மட்டுமு் 5,488 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டு உள்ளது. இதில், 5,478 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள். 10 பேர் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்கள். இவர்களையும் சேர்த்து கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 5 லட்சத்து 30 ஆயிரத்து 908 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் இன்று மட்டும் 175 ஆய்வகங்களில் 85,543 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இவைகளுடன் சேர்த்து, இதுவரை 63 லட்சத்து 3 ஆயிரத்து 466 மாதிரிகள் சோதனையிடப்பட்டன.

டிஸ்சார்ஜ்

இன்று கொரோனா கண்டறியப்பட்டவர்களில், 3,293 பேர் ஆண்கள். 2,194 பேர் பெண்கள். கொரோனா பாதித்த ஆண்களின் மொத்த எண்ணிக்கை 3,19,939., பெண்களின் எண்ணிக்கை 2,10,939. மூன்றாம் பாலினத்தவர்களின் எண்ணிக்கை 30.
தமிழகத்தில் இன்று மட்டும் 5,525 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இது வரை குணமானவர்களின் மொத்த எண்ணிக்கை 4 லட்சத்து 75 ஆயிரத்து 717 ஆக உள்ளது.

67 பேர் சாவு

கொரோனாவுக்கு இன்று மட்டும் 67 பேர் இறந்துள்ளனர். இதில்33 பேர் அரசு ஆஸ்பத்திரிகளிலும் 34 பேர் தனியார் ஆஸ்பத்திரிகளிலும் அனுமதிகப்பட்டவர்கள். இவர்களையும் சேர்த்து தமிழகத்தில் கொரோனாவுக்கு இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 8,685 ஆக அதிகரித்துள்ளது.
தற்போது 46,506 பேர் பல்வேறு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதில் 12 வயது வரை உள்ள சிறுவர்-சிறுமிகள் 22 ஆயிரத்து 448 பேர். 13 முதல் 60 வரை உள்ளவர்கள் 4 லட்சத்து 39 ஆயிரத்து 449 பேர். 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் 69 ஆயிரத்து 11 பேர்.

சென்னையில்….

சென்னையில் மட்டும் இன்று 989 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் இதுவரை மொத்தம் 1,53,616 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையைத் தவிர இன்று கோவையில் 543 பேருக்கும், சேலத்தில் 288 பேருக்கும், செங்கல்பட்டில் 265 பேருக்கும், திருவள்ளூரில் 258 பேருக்கும், கடலூரில் 254 பேருக்கும், திருப்பூரில் 187 பேருக்கும், தஞ்சாவூரில் 162 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 151 பேருக்கும், திருவண்ணாமலையில் 148 பேருக்கும், விழுப்புரத்தில் 139 பேருக்கும், திருச்சியில் 136 பேருக்கும் கொரோனா கண்டறியப்பட்டு உள்ளது.

இன்று சென்னையில் 16 பேரும், செங்கல்பட்டு, கோவை, கடலூர், கன்னியாகுமரி, திருவள்ளூரில் தலா 4 பேரும், ஈரோடு, சேலம், திருச்சியில் தலா 3 பேரும், ராணிப்பேட்டை, தஞ்சாவூர், திருவண்ணாமலை, திருப்பூர், வேலூர், விருதுநகரில் தலா 2 பேரும், திண்டுக்கல், காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, நாகப்பட்டினம், நாமக்கல், தென்காசி, தேனி, திருவாரூர், திருநெல்வேலி, விழுப்புரத்தில் தலா ஒருவரும் கொரோனாவுக்கு இறந்துள்ளனர்.

சென்னையில் 963 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். சென்னையில் மொத்தம் 1,40,633 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு இருக்கிறார்கள்.

திருவள்ளூரில் 350 பேரும், செங்கல்பட்டில் 346 பேரும், கடலூரில் 292 பேரும், சேலத்தில் 269 பேரும், திருச்சியில் 218 பேரும், திருப்பூரில் 189 பேரும், காஞ்சிபுரத்தில் 174 பேரும், நாமக்கல்லில் 172 பேரும், ஈரோடில் 171 பேரும், மதுரையில் 165 பேரும், கிருஷ்ணகிரியில் 139 பேரும், வேலூரில் 135 பேரும், திண்டுக்கலில் 131 பேரும் இன்று டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.