June 29, 2025

Seithi Saral

Tamil News Channel

பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 3 மசோதாக்களால் விவசாயிகளுக்கு எந்த பாதிப்பும் வராது- மோடி உறுதி

1 min read

Modi assured that farmers will not be affected by the 3 bills passed in Parliament

18-9-2020

பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 3 மசோதாக்களால் வசாயிகளுக்கு எந்த பாதிப்பும் வராது என்று பிரதமர் மோடி உறுதி அளித்துள்ளார்.

3 மசோதாக்கள்

விளை பொருட்களுக்கு குறைந்த பட்ச ஆதார விலையும், அரசு கொள்முதலும் நீடிக்கும் என்று பிரதமர் மோடி விவசாயிகளுக்கு உறுதியளித்துள்ளார்.

அத்தியாவசிய பொருட்கள் மசோதா 2020, விவசாயிகள் உற்பத்தி வர்த்தகம் மசோதா 2020, விலைவாசி தொடர்பான விவசாயிகள் அதிகாரம் மற்றும் பாதுகாப்பு ஒப்பந்த மசோதா 2020 ஆகிய 3 மசோதாக்கள் மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டன.

பதுக்கல் உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகளுக்கு இந்த மசோதாக்கள் வழிவகுக்கும் எனக் கூறி, காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

பாதிப்பும் ஏற்படாது

ஆனால் இந்த மசோதாக்களால் விவசாயிகளுக்கு எந்த வித பாதிப்பும் ஏற்படாது என்று பிரதமர் மோடி உறுதியளித்துள்ளார். இது தொடர்பாக மோடி விடுத்துள்ள அறிவிப்பில் குறைந்தபட்ச ஆதார விலை விவசாயிகளின் வேளாண் பொருட்களுக்கு நீடிக்கும் என்றும் அரசு கொள்முதல் முறையும் தொடரும் என்று உறுதியளித்துள்ளார்.

மக்களவையில் நிறைவேற்றப்பட்ட வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த மூன்று மசோதாக்கள் விவசாயிகளுக்கு உண்மையான அர்த்தத்தில் அதிகாரத்தை வழங்கும் என்றும் மோடி தெரிவித்துள்ளார்.

விவசாயிகளுக்கும் வேளாண் தொழில் சார்ந்தவர்களுக்கும் இடைத்தரகர்களிடமிருந்து விடுதலை தரும் என்று கூறியுள்ள பிரதமர் மோடி, அவர்களுடையே விளை பொருட்களை சந்தைப்படுத்த உள்ள தடைகளையும் இந்த மசோதாக்கள் நீக்கும் என்று தெரிவித்துள்ளார்.

விவசாயிகளை தவறாக திசைதிருப்ப பல சக்திகள் முயற்சிப்பதாகவும் பிரதமர் மோடி விமர்சித்துள்ளார்.

மக்களவையில் விவசாயிகள் தொடர்பான மூன்று மசோதாக்கள் அவசர அவசரமாக நிறைவேற்றப்பட்டதால் மத்திய அரசில் அங்கம் வகிக்க தாம் விரும்பவில்லை என்று ஹர்சிம்ரத் கவுர் தெரிவித்துள்ளார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.