June 29, 2025

Seithi Saral

Tamil News Channel

கோலம் போட வந்த தலைமை ஆசிரியரின் மனைவி கொலை

1 min read

Murder of the wife of the headmaster who came to put the kolam

18-9-2020

வீட்டு வாசலில் கோலம் போடவந்த தலைமை ஆசிரியரின் மனைவி கொடூரமாக அடித்துக் கொலை
செய்யப்பட்டார்.

கோலம்போட…

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே

ஓதவந்தான்குடி அரசு பள்ளியில் தலைமையாசியராகப் பணியாற்றி வருபவர் ஆனந்த ஜோதி. இவர் திருவள்ளுவர் நகரில் வசித்து வருகிறார். இவரது மனைவி சித்ரா.

சித்ரா


காலையில் வழக்கம்போல் வீட்டு வாசலில் கோலம் போடுவதற்காக வெளியே வந்தார். அப்போது மர்ம நபர்கள் அவரது தலையிலும் முகத்திலும் கொடூரமாகத் தாக்கினார்கள. இதில் சித்ரா பரிதாபமாக இறந்தார். பின்னர் அந்த கொலை கும்பல் தப்பிச் சென்றுவிட்டது.

சத்தம் கேட்டு ஆனந்தஜோதியின் குடும்பத்தினர் வெளியே வந்து பார்த்தபோது சித்ரா கொலை செய்யப்பட்டு கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பிணத்தைப் பார்த்து கதறி அழுதனர்.

விசாரணை

இதுபற்றிய தகவல் அறிந்து சீர்காழி போலீஸ் துணை சூப்பிரண்டு யுவப்பிரியா தலைமையில் இன்ஸ்பெக்டர் மணிமாறன், சப்-இன்ஸ்பெக்டர் லோகநாதன் மற்றும் போலீசார் விரைந்து வந்தனர். சித்ராவின் உடலை கைப்பற்றி நகைக்காக கொலை செய்யப்பட்டாரா? அல்லது முன்விரோதம் காரணமா? என விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் மயிலாடுதுறை மாவட்ட எஸ்.பி ஸ்ரீநாதா சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டார். குடியிருப்புகள் நிறைந்த பகுதியில் அதிகாலையில் கோலம் போட்டுக்கொண்டிருந்த பெண் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் சீர்காழியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.