June 29, 2025

Seithi Saral

Tamil News Channel

தென்காசி அருகே 14 வயது சிறுமியை திருமணம் செய்த வாலிபர் கைது

1 min read

A youth arrested who married a 14-year-old girl near Tenkasi

19-9-2020

தென்காசி அருகே 14 வயது சிறுமியை ஆசை வார்த்தைகள் கூறி திருமணம் செய்த வாலிபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

திருமணம்

தென்காசி மாவட்டம், சொக்கம்பட்டி பகுதியை சேர்ந்த 24 வயது வாலிபர் அதே பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமியை விரும்பினார். பின்னர் அந்த சிறுமியிடம் காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறினார். மேலும் சிறுமியின் வீட்டிற்கு சென்று பெண் கேட்டுள்ளார்.
இதற்கு சிறுமியின் பெற்றோர்கள் மறுப்பு தெரிவித்துவிட்டனர்.
அதன்பின் சில மாதங்களுக்கு முன்பு அந்த வாலிபர் சிறுமியிடம் ஆசை வார்த்தைகளை கூறி, கடத்தி சென்று திருமணம் செய்துள்ளார்.

கைது

தற்போது அந்த சிறுமி தற்பொழுது 4 மாத கர்ப்பிணியாக இருப்பதாக கூறப்படுகிறது. இதுபற்றி அப்பகுதி ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்த சமூக நல விரிவாக்க அலுவலர் புவனேஸ்வரி கொடுத்த புகாரின் பெயரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரஸ்வதி அந்த வாலிபரை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து கைது செய்து சிறையில் அடைத்தார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.