திருப்பதி பிரமோற்சவ விழா தொடங்கியது
1 min read
The Tirupati Pramorsava function began
19-9-2020
திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரமோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
திருப்பதி
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் பிரமோற்சவ விழா கோலாகலமாக கொண்டாடப்படும். தற்போது கொரோனா ஊரடங்கால் பல மாதங்கள் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. ஆனால் நித்திய பூஜைகள் மட்டும் நடைபெற்றது.
ஆனால் பின்னர் ஊரடங்கில் கொடுக்கப்பட்ட தளர்வுகள் காரணமாக குறைந்த அளவு பக்தர்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டனர்.
இந்த நிலையில் தற்போது புரட்டாசி பிரமோற்சவ விழா நடத்தப்பட வேண்டும். இந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக கடும் கட்டுப்பாடுகளுடன் பிரமோற்ச விழா நடத்தப்படுகிறது.
கோவில் மாடவீதிகளில் பிரம்மாண்டமான அளவில் ஏழுமலையானின் வருடாந்திர பிரம்மோற்சவ விழா நடைபெற்று வந்த நிலையில் இந்த ஆண்டு கோவில் வளாகத்திற்கு உள்ளேயே திருப்பதி வருடாந்திரபிரம்மோற்சவம் நடைபெற உள்ளது.
கொடியேற்றம்
இதனையடுத்து தற்போது திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ளது. பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு 5 டன் மலர்களால் கோவில் வளாகம்அலங்கரிக்கப்பட்டுள்ளது. இன்று தொடங்கிய விழாவானது, 27-ந் தேதி வரை தொடர்ந்து 9 நாட்கள் நடைபெற உள்ளது.