பாலியல் வன்முறைக்கான ஆதாரங்களைத் திரட்ட ரூ. ரூ.2.97 கோடியில் 14,950 கருவிகள்
1 min read
The Union Minister for Textiles and Information & Broadcasting, Smt. Smriti Irani interacting with the media regarding the cabinet approval for the Integrated Scheme for Development of Silk Industry, in New Delhi on March 22, 2018.
To raise evidence of sexual violence, Rs. 14,950 tools at Rs.2.97 crore
19-9-2020
பெண்களுக்கு எதிரான பாலியல் வழக்குகளை உரிய நேரத்தில் திறம்பட விசாரிப்பதற்காக பாலியல் வன்முறைக்கான ஆதாரங்களைத் திரட்டுவதற்கு ரூ.2.97 செலவில் 14,950 கருவிகள் வழங்கப்பட்டுள்ளதாக மத்திய மந்திரி ஸ்ருதி இரானி கூறினார்.
நிர்பயா நிதி
பாராளுமன்றத்தில் மாநிலங்களுக்கு வழங்கப்பட்ட நிர்பயா நிதி மற்றும் மாநிலங்கள் செலவிட்டுள்ள தொகை குறித்த கேள்விக்கு மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் நல மேம்பாட்டுத்துறை மந்திரி ஸ்மிருதி இரானி பதில் அளித்து கூறியதாவது:-
நிர்பயா நிதியிலிருந்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு இதுவரை ரூ.3,024.46 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது. இதில் மாநிலங்கள் ரூ.1,919.11 கோடியைச் செலவிட்டுள்ளன. அதிகபட்சமாக டெல்லிக்கு மட்டும் ரூ.409.03 கோடி விடுவிக்கப்பட்டது. அதில், ரூ.352.58 கோடி செலவிட்டுள்ளது.
உத்தரப் பிரதேசத்திற்கு ரூ.324.98 கோடி ஒதுக்கப்பட்டது. அதில், ரூ.216.75 கோடி செலவிட்டுள்ளது. தமிழகத்துக்கு ரூ.303.06 கோடி விடுவிக்கப்பட்டதில் ரூ.265.55 கோடி செலவிடப்பட்டுள்ளது.
கருவிகள்
பெண்களுக்கு எதிரான பாலியல் வழக்குகளை உரிய நேரத்தில் திறம்பட விசாரிப்பதற்காக பாலியல் வன்முறைக்கான ஆதாரங்களைத் திரட்டும் 14,950 கருவிகள் வழங்கப்பட்டுள்ளன. இதன் மதிப்பு ரூ.2.97 கோடியாகும்.
இதில் அதிகபட்சமாக உத்தரப் பிரதேசத்திற்கு 3,056 கருவிகள் வழங்கப்பட்டுள்ளன. அதைத்தொடர்ந்து, ராஜஸ்தான் மாநிலத்துக்கு 1,452 கருவிகளும், மத்தியப் பிரதேசத்துக்கு 1,187 கருவிகளும் வழங்கப்பட்டுள்ளன.
இவ்வாறு மத்திய மந்திரி ஸ்ருதி இரானி கூறினார்.