இந்தியாவில் ஒரே நாளில் 70,589 பேருக்கு கொரோனா உறுதி
1 min read
Corona guaranteed 70,589 people one day in India
29/9/2020
இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 70,589 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது.
கொரோனா
இந்தியாவில் கொரோனா நிலவரத்தை தினமும் காலையில் மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டு வருகிறது. அதன்படி இன்று( செவ்வாய்க்கிழமை) வெளியிட்டு உள்ள தகவல் வருமாறு:-
இந்தியாவல் நேற்று (திங்கட்கிழமை) ஒரே நாளில் 70,589 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனால் நாடுமுழுவதும் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 61 லட்சத்து, 45 ஆயிரத்து 291 ஆக உளர்ந்துள்ளது.
தற்போது 9 லட்சத்து47 ஆயிரத்து 576 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நேற்று மட்டும் இந்தியாவில் கொரோனாவுக்கு 776 பேர் இறந்துள்ளனர். இவர்களையும் சேர்த்து இதுவரை மொத்தம் 96 ஆயிரத்து 318 பேர் கொரோனாவுக்கு இறந்துள்ளனர்.
பரிசோதனைகள்
இந்தியாவில் நேற்று (திங்கட்கிழமை) ஒரே நாளில் 11,42,811 மாதிரிகள் பரிசோதனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதாக ஐ.சி.எம்.ஆர் தெரிவித்துள்ளது. இதுவரை இந்தியாவில் 7 கோடியே 31 லட்சத்து 10 ஆயிரத்து 41 மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டு உள்ளது.