கொரோனாவுக்கு சிகிச்சை பெற்ற டிரம்ப் திடீரென்று காரில் வந்து பரபரப்பு
1 min read
Trump, who was being treated for corona, suddenly got in the car
5/10/2020
ஆஸ்பத்திரியில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்ற டிரம்ப் திடீரென்று காரில் வந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
டிரம்ப்புக்கு கொரோனா
அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் அவரின் மனைவி மெலனியா டிரம்ப் இருவருக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அவர்கள் இருவரும் தனிமைப்படுத்திக்கொண்டனர்.
ஆனால் டிரம்ப்புக்கு காய்ச்சல் ஏற்பட்டதால் அவர், வால்டர்ரீட் தேசிய ராணுவ ஆஸ்பத்திரியில் டிரம்ப் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். ஆஸ்பத்திரியில் இருந்தபடியே அலுவலகப் பணிகளை மேற்கொண்டார்.
காரில் வந்தார்
அவர் திங்கள்கிழமைதான்(இன்று) சிகிச்சை முடித்து வீட்டுக்கு அனுப்பப்படலாம் என மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஆனால் அவர் ஞாயிற்றுக்கிழமையே (4-ந் தேதி) ஆஸ்பத்திரியில் இருந்து திடீரென வெளியே காரில் வந்தார்.
காருக்குள் மாஸ்க் அணிந்தபடி, ஆஸ்பத்திரியின் வெளியே நின்றிருந்த தனது ஆதரவாளர்களை நோக்கி கையசைத்தவாறு சென்றார். ஆஸ்பத்திரியில் இருந்து புறப்படும்முன் அவர் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் அவர் ” என் நாட்டு தேசப்பற்று மிக்க மக்களுக்கும், நீண்டநேரமாக சாலையில் நின்று இருக்கும் மக்களுக்கும் நான் சிறிய வியப்பு அளிக்கும் வகையில் அவர்களை சந்திக்கப்போகிறேன்.” என்று குறிப்பிட்டு இருந்தார்.
வெளியே வந்தபிறகு அவர் வெளியிட்ட வீடியோவில், “எனக்கு இது வித்தியாசமான பயணமாக அமைந்திருந்தது. ஆஸ்பத்திரி எனும் உண்மையான பள்ளிக்கூடத்துக்கு வந்து கொரோனா வைரஸ் பற்றி அதிகமான பாடங்களைக் கற்றுக்கொண்டேன், புரிந்துகொண்டேன். என்னைக் கவனித்துக்கொண்ட மருத்துவர்களின் பணி மகத்துவமானது” என்று கூறியுள்ளார்.
அதிபர் ட்ரம்ப்புக்கு இன்னும் சிகிச்சை முடியாத நிலையில் திடீரென அவர் வெளியே வந்தது கேள்விகளையும் பரபரப்பையும் எழுப்பியுள்ளது.