June 28, 2025

Seithi Saral

Tamil News Channel

கொரோனா நோயாளிகள் வீட்டில் தகரம் அடிப்பது ஏன்?- ஐகோர்ட்டு கேள்வி

1 min read

Why do corona patients beat tin at home? – iCourt question

6-/10/2020
கொரோனா நோயாளிகள் வீட்டு வாசல் பகுதியில் தகரம் அடிக்கப்படுவது ஏன் என்று சென்னை ஐகோர்ட்டு கேள்வி எழுப்பியுள்ளது.

தகரம்

கொரோனா பாதித்தவர்களின் வீடுகளில் முன்னால் வாசல் பகுதியில் தகரம் அடித்து மறைப்பு ஏற்படுத்தப்படுகிறது. இந்த பணியை ஊராட்சி ஒன்றியம், நகராட்சி, மாநகராட்சி ஊழியர்கள் செய்கிறார்கள்.
கொரோனா பாதித்தவர்களை தனிமைப்படுத்தும் நோக்கத்தோடு இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக கூறப்பட்டது.
ஆனால் இப்படி அடைக்கப்படுவதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இதுபற்றி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது. மேலும் கொரோனா அறிகுறி இல்லாத மற்றும் குறைவான அறிகுறியுடன் கொரொனா பாதிப்பு உள்ளவர்களை கொரொனா மையத்தில்தான் சிகிச்சை பெற வேண்டும் என கட்டாயப்படுத்தக்கூடாது என தமிழக அரசுக்கு உத்தரவிட கோரியும் அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளது.

உத்தரவு

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் ஹேமலதா அமர்வு, கொரோனா நோயாளிகளின் வீடுகளில், என்ன விதியின் அடிப்படையில் தகரம் அடிக்கப்படுகிறது? எனக் கேள்வியெழுப்பியது. மேலும், குறைவான அறிகுறியுடன் பாதிப்பு உள்ளவர்களை கொரோனா மையத்தில்தான் சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என்று கட்டாயப்படுத்தக் கூடாது என்ற கேள்விக்கு தமிழக அரசும், சென்னை மாநகராட்சியும் வரும் 19-ந் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.