கொரோனா நோயாளிகள் வீட்டில் தகரம் அடிப்பது ஏன்?- ஐகோர்ட்டு கேள்வி
1 min read
Why do corona patients beat tin at home? – iCourt question
6-/10/2020
கொரோனா நோயாளிகள் வீட்டு வாசல் பகுதியில் தகரம் அடிக்கப்படுவது ஏன் என்று சென்னை ஐகோர்ட்டு கேள்வி எழுப்பியுள்ளது.
தகரம்
கொரோனா பாதித்தவர்களின் வீடுகளில் முன்னால் வாசல் பகுதியில் தகரம் அடித்து மறைப்பு ஏற்படுத்தப்படுகிறது. இந்த பணியை ஊராட்சி ஒன்றியம், நகராட்சி, மாநகராட்சி ஊழியர்கள் செய்கிறார்கள்.
கொரோனா பாதித்தவர்களை தனிமைப்படுத்தும் நோக்கத்தோடு இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக கூறப்பட்டது.
ஆனால் இப்படி அடைக்கப்படுவதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இதுபற்றி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது. மேலும் கொரோனா அறிகுறி இல்லாத மற்றும் குறைவான அறிகுறியுடன் கொரொனா பாதிப்பு உள்ளவர்களை கொரொனா மையத்தில்தான் சிகிச்சை பெற வேண்டும் என கட்டாயப்படுத்தக்கூடாது என தமிழக அரசுக்கு உத்தரவிட கோரியும் அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளது.
உத்தரவு