June 29, 2025

Seithi Saral

Tamil News Channel

சசிகலா, சுதாகரன், இளவரசி பெயரில் உள்ள ரூ.2 ஆயிரம் கோடி சொத்துக்கள் முடக்கம்

1 min read

சசிகலா

Rs 2,000 crore assets in the name of Sasikala, Sudhakaran and Princess frozen

7/10/2020

சசிகலா, சுதாகரன், இளவரசி பெயரில் உள்ள ரூ.2 ஆயிரம் கோடி மதிப்புள்ள சொத்துகளை வருமான வரித்துறை முடக்கியுள்ளது.

இது தொடர்பாக வருமான வரித்துறை கூறி இருப்பதாவது:-

பினாமி தடுப்பு சட்டத்தின் கீழ், சசிகலா, சுதாகரன், இளவரசி பெயரில் உள்ள 2 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகள் முடக்கப்பட்டுள்ளன. சிறுதாவூர் பங்களா, கோடநாடு எஸ்டேட் சொத்துகளை முடக்கப்பட்டுள்ளன.
2017ம் ஆண்டு வருமான வரித்துறை அதிகாரிகள் சசிகலாவிற்கு சொந்தமான 200 இடங்களில் சோதனை நடத்தினர். சோதனையில் கிடத்த ஆவணங்கள் அடிப்படையில் தொடர் சொத்துக்கள் முடக்கும் நடவடிக்கையில் வருமான வரித்துறை தீவிரம் காட்டி வருகிறது.

கடந்த 2019ம் ஆண்டு சசிகலாவின் சுமார் ரூ.1500 கோடி மதிப்புள்ள சொத்தும், கடந்த மாதம் போயஸ் கார்டனில் கட்டப்பட்டு வரும் வீடு உள்ளிட்ட 300 கோடி மதிப்புள்ள சொத்தும் முடக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.