தமிழகத்தில் இன்று 5,718 பேர் கொரோனாவில் இருந்து மீண்டனர்
1 min read
In Tamil Nadu today 5,718 people recovered from the corona
8/10/2020
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,718 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு டிஸ்சார்ஜ் செய்ப்பட்டுள்ளனர்.
கொரோனா
தமிழகத்தில் கொரோனா பரவல் பற்றிய விவரங்களை தமிழக சுகாதாரத்துறை தினமும் மாலையில் வெளியிட்டு வருகிறது. அதன்படி இன்று ( வியாழக்கிழமை) வெளியிட்ட தகவல்கள் வருமாறு:-
தமிழகத்தில் இன்று(வியாழக்கிழமை) மடடும் 5,088 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. இதில் 5,079 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள். 9 பேர் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்கள். இவர்களையும் சேர்த்து கெரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 6,40,943 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் இன்று மட்டுமு் 190 ஆய்வகங்களில் 87,341 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இவைகளுடன் சேர்த்து இதுவரை 80 லட்சத்து 44 ஆயிரத்து 447 மாதிரிகள் சோதனையிடப்பட்டன.
இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களில் 3,113 பேர் ஆண்கள். 1,975 பேர் பெண்கள். கொரோனா பாதித்த மொத்த ஆண்களின் எண்ணிக்கை 3,87,080. பெண்களின் எண்ணிக்கை 2,53,832. மூன்றாம் பாலினத்தவர்களின் எண்ணிக்கை 31 .
டிஸ்சார்ஜ்
கொரோனா பாதித்தவர்களில் இன்று மட்டும் 5,718 பேர் குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால் கொரோனாவில் இருந்து மீண்டவர்களின் மொத்த எண்ணிக்கை 5 லட்சத்து 86 ஆயிரத்து 454 ஆக உள்ளது.
இன்று மட்டும் 68 பேர் கொரோனாவால் இறந்துள்ளனர். இதில் 37 பேர் அரசு ஆஸ்பத்தரிகளிலும் 31 பேர் தனியார் ஆஸ்பத்திகளிலும் அனுமதிக்கப்பட்டவர்கள் ஆவர். இவர்களையும் சேர்த்து தமிழகத்தில் கொரோனாவால் இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 10,052 ஆக உயர்ந்துள்ளது.
தற்போது 44,437 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
சென்னையில்…
சென்னையில் இன்று மட்டும்1,295 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டு உள்ளது. இவர்களையும் சேர்த்து இதுவரை சென்னையில் 1,78,108 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சென்னையைத் தவிர இன்று கோவையில் 448 பேருக்கும், செங்கல்பட்டில் 363 பேருக்கும், சேலத்தில் 362 பேருக்கும், தஞ்சாவூரில் 239 பேருக்கும், திருவள்ளூரில் 194 பேருக்கும், திருப்பூரில் 173 பேருக்கும், நாமக்கலில் 147 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 137 பேருக்கும், வேலூரில் 133 பேருக்கும், கடலூரில் 124 பேருக்கும் கொரோனா கண்டறியப்பட்டுள்ளது.
நெல்லை
நெல்லை மாவட்டத்தில் இன்று 62 பேருக்கும் தென்காசி மாவட்டத்தில் 8 பேருக்கும், தூத்துக்குடி மாவட்டத்தில் 61 பேருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டு உள்ளது.
இன்று சென்னையில் 16 பேரும், வேலூரில் 7 பேரும், தஞ்சாவூரில் 5 பேரும், திருவள்ளூரில் 4 பேரும், செங்கல்பட்டு, கோவை, கடலூர், கிருஷ்ணகிரி, திருவாரூரில் தலா 3 பேரும், தர்மபுரி, கன்னியாகுமரி, மதுரை, நாமக்கல், ராணிப்பேட்டை, சேலம், திருப்பூரில் தலா 2 பேரும், அரியலூர், திண்டுக்கல், ஈரோடு, கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், தேனி, விருதுநகரில் தலா ஒருவரும் கொரோனாவுக்கு இறந்துள்ளனர்.
சென்னையில் 1,144 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். சென்னையில் இதுவரை மொத்தம் 1,61,477 டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.
கோவையில் இன்று 628 பேரும், சேலத்தில் 467 பேரும், செங்கல்பட்டில் 427 பேரும், திருவள்ளூரில் 296 பேரும், தஞ்சாவூரில் 265 பேரும், நாமக்கலில் 184 பேரும், திருவாரூரில் 168 பேரும், திருப்பூரில் 158 பேரும் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.