தமிழகத்தில் இன்று 5,185 பேருக்கு கொரேனா; 5.357 பேர் டிஸ்சார்ஜ்
1 min read
Corona for Corona for 5,185 people in Tamil Nadu today; 5.357 discharged
9/10-/-2020
தமிழகத்தில் இன்று ஓரேநாளில் 5,185 கொரோனா கண்டறியப்பட்டு நிலையி் 5,357 பேர் குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளனர்.
கொரோனா
தமிழகத்தில் கொரோனா பரவல்தொடர்ந்தாலும் குணமாவோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவது ஆறுதலான விசயம்.
தமிழகத்தில் கொரோனா நிலவரம் பற்றி தமிழக சுகாதாரத்துறை தினமும் மாலையில் வெளியிட்டு வருகிறது. அதன்படி இன்று மாலை வெளியிட்ட தகவல்கள் வருமாறு:-
தமிழகத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) மட்டும் ஒரே நாளில் 5,185 பேர் கொரோனா கண்டறிப்பட்டு உள்ளது. இதில் 5,166 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள். 19 பேர் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்கள். இவர்களையும் சேர்த்து இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6,46,128 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று மட்டும் 190 ஆய்வகங்களில்97,087 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இவைகளுடன் சேர்த்து, இதுவரை 81 லட்சத்து 41 ஆயிரத்து 534 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டன.
இன்று கொரோனா கண்டறியப்பட்டவர்களில், 3,164 பேர் ஆண்கள். 2,021 பேர் பெண்கள். கொரோனா பாதித்த ஆண்களின் மொத்த எண்ணிக்கை 3,90,244. பெண்களின் எண்ணிக்கை 2,55,853. மூன்றாம் பாலினத்தவர்களின் எண்ணிக்கை 31 .
டிஸ்சார்ஜ்
கொரேனா பாதித்தவர்களில் இன்று மட்டும் 5,357 பேர் குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இவர்களையும் சேர்த்து இவரை டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 5 லட்சத்து 91 ஆயிரத்து 811 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் இன்று மட்டும் 68 பேர் கொரோனாவுக்கு இறந்துள்ளனர். இதில், 34 பேர் அரசு ஆஸ்பத்திரிகளிலும் 34 பேர் தனியார் ஆஸ்பத்திரிகளிலும் அனுமதிக்கப்பட்டவர்கள். இவர்களையும் சேர்த்து தமிழகத்தில் கொரோனாவுக்கு இறந்தவர்களின் மொததம் எண்ணிக்கை 10,120 ஆக அதிகரித்துள்ளது.
தற்போது 44,197 பேர் கொரோனவுக்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
சென்னையில்…
சென்னையில் மட்டும் இன்று 1,288 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டு உள்ளது. இதுவரை சென்னையில் 1,79,424 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கோவையில் இன்று 397 பேருக்கும், செங்கல்பட்டில் 343 பேருக்கும், சேலத்தில் 295 பேருக்கும், தஞ்சாவூரில் 240 பேருக்கும், திருவள்ளூரில் 226 பேருக்கும், திருப்பூரில் 159 பேருக்கும், கடலூரில் 150 பேருக்கும், நாமக்கலில் 148 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 147 பேருக்கும், வேலூரில் 141 பேருக்கும், ஈரோடில் 137 பேருக்கும் கொரோனா உறுதியாகியுள்ளது.
நெல்லை
நெல்லை மாவட்டத்தில் இன்று 72 பேருக்கும் தென்காசி மாவட்டத்தில் 14 பேருக்கும் தூத்துக்குடி மாவட்டத்தில் 73 பேருக்கும் கொரோனா கண்டறியப்பட்டு உள்ளது.
சென்னையில் 22 பேரும், செங்கல்பட்டில் 6 பேரும், வேலூரில் 5 பேரும், கோவையில் 4 பேரும், தர்மபுரி, ராமநாதபுரம், ராணிப்பேட்டை, சேலத்தில் தலா 3 பேரும், திண்டுக்கல், காஞ்சிபுரம், தேனி, திருவண்ணாமலையில் தலா 2 பேரும், அரியலூர், கடலூர், கிருஷ்ணகிரி, மதுரை, தென்காசி, தஞ்சாவூர், திருப்பத்தூர், திருவள்ளூர், தூத்துக்குடி, திருநெல்வேலி, திருப்பூரில் தலா ஒருவரும் இன்று கொரோனாவுக்கு இறந்துள்ளனர்.
சென்னையில் இன்று மட்டும் 1,128 பேர் குணமாகி டிஸ்சார்ஜ் ஆகிஇருக்கிறார்கள். இதுவரை சென்னையில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,62,605 ஆக அதிகரித்துள்ளது.
செங்கல்பட்டில் இன்று 442 பேரும், கோவையில் 413 பேரும், சேலத்தில் 364 பேரும், தஞ்சாவூரில் 261 பேரும், திருவள்ளூரில் 222 பேரும், திருப்பூரில் 197 பேரும், திருவாரூரில் 170 பேரும், வேலூரில் 158 பேரும், ஈரோடில் 149 பேரும், கடலூரில் 142 பேரும் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர்.
மேற்கண்ட தகவல்களை தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.