June 28, 2025

Seithi Saral

Tamil News Channel

தென்காசி அருகே திருமணம் செய்து வைக்காததால் தந்தையை கொன்ற வாலிபர்

1 min read

The young man who killed his father because he did not get married near Tenkasi

12/10/2020

தென்காசி அருகே திருமணம் செய்து வைக்காத ஆத்திரத்தில் தந்தையை கம்பால் அடித்து கொலை செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

திருமணம்

தென்காசி மாவட்டம் சின்னக்கோவிலாங்குளம் அருகே ஊத்தங்குளம் நடுத்தெருவில் வசித்து வருபவர் மாடப்பன் மகன் செல்வராஜ். இவர் வேலைக்குச் செல்லாமல் வீட்டில் தனது தந்தையிடம் அடிக்கடி பணம் வாங்கி செலவு செய்து வந்துள்ளார். இந்த நிலையில் செல்வராஜ் தனக்கு பெண் பார்த்து திருமணம் செய்து வைக்கும்படி தந்தையிடம் கூறியுள்ளார்.

கொலை

அதற்கு மாடப்பன் வேலைக்குச் செல்லாதவனுக்கு பெண் யார் கொடுப்பார்கள் என கேட்டுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த செல்வராஜ் கம்பால் தனது தந்தையை சரமாரியாக அடித்துள்ளார். இதில் மாடப்பன் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து மாடப்பன் மகள் சின்ன கோவிலாங்குளம் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் மீனாட்சிநாதன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சங்கரன்கோவில் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் இதுபற்றி வழக்குப்பதிவு செய்து தந்தையை கொலை செய்த செல்வராஜை கைது செய்தனர். மேலும் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.