தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு
1 min read
Chance of rain in most districts of Tamil Nadu
13/10/2020
தமிழகத்தில் பெரும்பாலானா மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது.
மழை பெய்ய வாய்ப்பு
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டு இருப்பதாவது:-
சென்னை, திருவள்ளூர்,காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, சேலம், கோவை, கிருஷ்ணகிரி, திண்டுக்கல், குமரி, நீலகிரி, தேனி, நெல்லை, தென்காசி மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது. கோவை, நீலகிரி, தேனி மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும்.
இன்று காலை 8 மணி வரை கடந்த 24 மணி நேரத்தில் வால்பாறையில் 11 செ.மீ., சின்னக்கல்லாறில்9 செ.மீ., சோலையாறு, நடுவட்டத்தில் தலா 8 செ.மீ., மழை பதிவாகியுள்ளது.
குமரிக்கடல், மன்னார் வளைகுடா, கேரளா, கர்நாடக கடலோர பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம்.
இவ்வாறு அந்த செய்தியில் கூறப்பட்டு உள்ளது.