June 29, 2025

Seithi Saral

Tamil News Channel

தமிழகத்தில் இன்று 4,666 பேருக்கு கொரோனா; 5,117 பேர் டிஸ்சார்ஜ்

1 min read

Corona for 4,666 people in Tamil Nadu today; 5,117 discharged

13/10/2020

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 4,666 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு உள்ளது. அதேநேரம் 5,117 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுஉள்ளனர்.

கொரோனா

தமிழகத்தில் கொரோனா நிலவரம் பற்றிய தகவலை தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டு வருகிறது. அதன்படி இன்று மாலை வெளியிட்ட தகவல்கள் வருமாறு:-

தமிழகத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) மட்டும் 4,666 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டு உள்ளது. நேற்று 4,879 பேர் கொரோனா பாதித்த நிலையில் இன்று சற்று குறைந்துள்ளது. இது வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 6 லட்சத்து 65 ஆயிரம் 930 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று மட்டும் 191 ஆய்வகங்களில் 85,509 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டன. இவைகளுடன் சேர்த்து இதுவரை 84 லட்சத்து 88 ஆயிரத்து 503 மாதிரிகள் பரிசோதனையிடப்பட்டன.

டிஸ்சார்ஜ்

இன்று கொரோனா கண்டறியப்பட்டவர்களில், 2,834 பேர் ஆண்கள். 1,832 பேர் பெண்கள். கொரோனா பாதித்த ஆண்களின் மொத்த எண்ணிக்கை 4,02,216. பெண்களின் எண்ணிக்கை 2,63,682. மூன்றாம் பாலினத்தவர்களின் மொத்த எண்ணிக்கை 32.
இன்று மட்டும் 5,117 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 6 லட்சத்து 12 ஆயிரத்து 320 ஆக உள்ளது.

தமிழகத்தில் நேற்று கொரோனாவுக்கு 62 பேர் இறந்த நிலையில் இன்று 57 பேர் இறந்துள்ளனர். இதில் 38 பேர் அரசு ஆஸ்பத்திரிகளிலும் 19 பேர் தனியார் ஆஸ்பத்திரிகளிலும் அனுமதிக்கப்பட்டவர்கள். தமிழகத்தில் மொத்தம் கொரோனாவுக்கு 10,371 பேர் இறந்துள்ளனர்.
தற்போது 43,239 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

சென்னையில்…

சென்னையில் இன்று மட்டும் 1,164 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. சென்னையில் இதுவரை மொத்தம் 1,84,429 பேர் கொரோனாவால்பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையைத் தவிர இன்று, கோவையில் 398 பேருக்கும், சேலத்தில் 277 பேருக்கும், செங்கல்பட்டில் 252 பேருக்கும், திருவள்ளூரில் 236 பேருக்கும், திருப்பூரில் 166 பேருக்கும், கடலூரில் 138 பேருக்கும், காஞ்சிபுரம், நாமக்கலில் தலா 129 பேருக்கும் கொரோனா உறுதியாகியுள்ளது.

நெல்லை

நெல்லை மாவட்டத்தில் 60 பேருக்கும், தென்காசி மாவட்டத்தில் 31 பேருக்கும், தூத்துக்குடி மாவட்டத்தில் 55 பேருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டு உள்ளது.

இன்று சென்னையில் 13 பேரும், கோவையில் 5 பேரும், செங்கல்பட்டு, திருப்பத்தூர், திருப்பூரில் தலா 4 பேரும், கடலூர், கிருஷ்ணகிரி, சேலத்தில் தலா 3 பேரும், ஈரோடு, காஞ்சிபுரம், தஞ்சாவூர், திருவள்ளூர், திருவண்ணாமலை, வேலூரில் தலா 2 பேரும், திண்டுக்கல், மதுரை, நீலகிரி, தேனி, தூத்துக்குடி, விழுப்புரத்தில் தலா ஒருவரும் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர்.

இன்று சென்னையில் மட்டும் 1,217 பேர் குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். சென்னையில் மொத்தம்1,67,284 கொரோனாவில் இருந்து விடுபட்டுள்ளனர். இன்று கோவையில் 478 பேரும், செங்கல்பட்டில் 326 பேரும், திருவள்ளூரில் 294 பேரும், சேலத்தில் 282 பேரும், நீலகிரியில் 192 பேரும், தஞ்சாவூரில் 164 பேரும், ஈரோடில் 160 பேரும் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.