தமிழகத்தில் இன்று 2,348 பேருக்கு கொரோனா
1 min read
Corona for 2,348 people in Tamil Nadu today
5/11/2020
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டு உள்ளது.
கொரோனா
தமிழகத்தில் கொரோனா நிலவரத்தை தினமும் மாநில சுகாதாரத்துறை வெளியிட்டு வருகிறது. அதன்படி இன்று வெளியிட்ட தகவல்கள் வருமாறு:-
தமிழகத்தில் இன்று 2,348 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு உள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனா கண்டறியப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 7 லட்சத்து 36 ஆயிரத்து 777 ஆக உயர்ந்துள்ளது.
டிஸ்சார்ஜ்
கொரோனா கண்டறியப்பட்டவர்களில் இன்று மட்டுமு் 2 ஆயிரத்து 413 பேர் சிகிச்சைக்கு குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இவர்களையும் சேர்த்து தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 7 லட்சத்து 6 ஆயிரத்து 544 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் இன்று மட்டும் 28 பேர் கொரோனாவுக்கு இறந்துள்ளனர். இவர்களையும் சேர்த்து தமிழகத்தில் இதுவரை 11,272 பேர் கொரோனாவுக்கு இறந்துள்ளனர் .