June 29, 2025

Seithi Saral

Tamil News Channel

தமிழகத்தில் இன்று 2,334 பேருக்கு கொரோனா

1 min read

Corona for 2,334 people in Tamil Nadu today

8/11/2020

தமிழகத்தில் இன்று மட்டும் 2,334 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது.

கொரோனா

தமிழகத்தில் கொரோனா நிலவரம் பற்றி தினமும் மாநில சுகாதாரத்துறை வெளியிட்டு வருகிறது. அதன்படி இன்று வெளியிட்ட தகவல்கள் வருமாறு:-

தமிழகத்தில் இன்று(ஞாயிற்றுக்கிழமை) புதிதாக 2,334 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 7,43,822 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் இன்று 20 பேர் கொரோனாவுக்கு இறந்துள்ளனர். இவர்களையும் சேர்த்து இதுவரை கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை 11,344 ஆக உயர்ந்துள்ளது.

டிஸ்சார்ஜ்

தமிழகத்தில் இன்று மட்டும் 2,386 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இவர்களையும் தமிழகத்தில் கொரோனாவில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 7 லட்சத்து13 ஆயிரத்து 584 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் தற்போது 18,894 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

சென்னையில்

சென்னையில் இன்று புதிதாக 601 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையை தவிர மற்ற மாவட்டங்களில் 1,733 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.