June 28, 2025

Seithi Saral

Tamil News Channel

டெல்லியில் 3 அடுக்கு கட்டிடத்தில் தீ விபத்து

1 min read

A fire broke out in a 3-storey building in Delhi

12-/-11/-2020
டெல்லியில் மூன்று மாடி கட்டிடத்தில் தீவிபத்து ஏற்பட்டது.

தீ விபத்து

டெல்லி காந்தி நகர் பகுதியில் 3 மாடி கட்டிடம் ஒன்றில் கடைகள் அமைந்துள்ளன. கொரோனா ஊரடங்கில் தளர்வு அறிவிக்கப்பட்டதால் அந்த கடைகள் அனைத்தும் திறந்து இருந்தன. தற்போது தீபாவளி பண்டிகையையொட்டி அந்த கடைகளில் வியாபாரம் சூடு பிடித்திருந்தது. பொதுமக்கள் அதிக அளவில் வந்து செல்கிறார்கள்.

இந்த நிலையில், இன்று ( வியாழக்கிழமை) இரவு அந்த கட்டிடத்தில் உள்ள கடையொன்றில் திடீரென தீப்பிடித்து உள்ளது.

இதுபற்றிய தகவல் அறிந்து தீயணைப்பு வாகனங்கள் உடனடியாக சம்பவ பகுதிக்கு சென்றன. 20 தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு உள்ளன. இந்த தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் தெளிவாக தெரியவரவில்லை. ஆனாலும் மின் கசிவால் தீ விபத்து ஏற்பட்டிருக்க கூடும் என சந்தேகிக்கப்படுகிறது. இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.