தமிழகத்தில் இன்று 1,714 பேருக்கு கொரோனா; 2,311 டிஸ்சார்ஜ்
1 min read
Corona for 1,714 people in Tamil Nadu today; 2,311 discharge
18/11/2020
தமிழகத்தில் இன்று 1,714 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 2,311 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளனர்.
தமிழகத்தில் கொரோனா
தமிழகத்தில் கொரோனா தொற்று சற்று குறைந்து வருகிறது. 6-வது நாளாக 2 ஆயிரத்துக்கும் கீழ் கொரோனா பரவல் கண்டறியப்பட்டு உள்ளது.
இன்றைய கொரோனா நிலவரம் பற்றிய தகவல்களை தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டது. அதன் விவரம் வருமாறு:-
தமிழகத்தில் இன்று( புதன்கிழமை) 1,714 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு உள்ளது. இவர்களையும் சேர்த்து தமிழகத்தில் கொரோனாவால் பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 7 லட்சத்து 63 ஆயிரத்து 282 ஆக அதிகரித்துள்ளது.
சென்னையில் மட்டும் இன்று 479 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இவர்களையும் சேர்த்து சென்னையில் இதுவரை மொத்தம் 2 லட்சத்து10 ஆயிரத்து135 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டு உள்ளது. 32-வது நாளாக சென்னையில் ஆயிரத்துக்கும் கீழ் பாதிப்பு எண்ணிக்கை பதிவாகியுள்ளது.
18 பேர் சாவு
தமிழகத்தில் இன்று மட்டும்18 பேர் கொரோனாவால் இறந்துள்ளனர். இவர்களில் 8 பேர் அரசு ஆஸ்பத்திரிகளிலும், 10 பேர் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை தமிழகத்தில் 11,531 பேர் கொரோனாவுக்கு இறந்துள்ளனர்.
தமிழகம் முழுவதும் இன்று ஒரே நாளில் 2,311 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர். இவர்களையும் சேர்த்து இதுவரை 7,37,281 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுஉள்ளனர்.
தற்போது தமிழகம் முழுவதும் 14,470 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இன்று ஒரே நாளில் தமிழகம் முழுவதும் 67,014 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டதாகவும், இதுவரை மொத்தம் 1,12,66,091 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.
மேற்கண்ட தகவல்களை தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.