சபரிமலையைில் இரவு 9.30 மணிக்கே நடை அடைக்கப்படும்
1 min read
The door will close at 9.30 pm in Sabarimala
18/11/2020
சபரிமலையில் இரவு 10 மணிக்கு பதிலாக 9.30-க்கே நடை அடைக்கப்படும் என்று
தேவசம் போர்டு அறிவித்துள்ளது.
சபரிமலை
சபரிமலை அய்யப்பன் கோவிலில் மகர விளக்கு பூஜைக்காக நடை திறக்கப்பட்டு உள்ளது. இருமுடி கட்டிய பக்தர்கள் மலைக்குச் சென்று வருகிறார்கள்.
கொரோனா பரவல் ஊரடங்கு காரணமாக சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு மிகுந்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. மேலும் குறிப்பிட்ட எண்ணிக்கையில்தான் பக்தர்களை அனுமதிக்கிறார்கள். முன் அனுமதி பெற்றபிறகே மலைக்குச் செல்ல முடியும்.
9.30 மணிக்கே..
இந்த நிலையில்
சபரிமலையில் இரவு 10 மணிக்கு பதிலாக 9.30-க்கே நடை அடைக்கப்படும் என தேவசம் போர்டு அறிவித்துள்ளது. இரவு நேரத்தில் நீண்ட நேரம் நடை திறக்க வேண்டாம் என்று தந்திரியுடன் கலந்து ஆலோசித்ததில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இரவு 9 மணிக்கு பதிலாக 8 மணிக்கே அத்தாழ பூஜை நடத்தப்படுகிறது. இரவு 9 மணிக்கு அறிவராசனம் பாடி, 9.30 மணிக்கு நடை அடைக்கப்படுகிறது. பக்தர்கள் இரவு7 மணிக்கு பின் பம்பையில் இருந்து சன்னிதானம் செல்ல அனுமதி கிடையாது என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.