சசிகலாவின் விடுதலை கட்சியில் எந்தமாற்றமும் ஏற்படாது; முதல்வர் கூறுகிறார்
1 min read
There will be no change in Sasikala’s Liberation Party; Says the Chief
18/11/2020
சசிகலாவின் விடுதலை கட்சியிலும், ஆட்சியிலும் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது என முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று ( புதன்கிழமை) கோவையில் நிருபர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் “சசிகலா விடுதலை குறித்து கேள்வி கேட்டனர். அதற்கு எடப்பாடி பழனிசாமி ‘‘சசிகலாவின் விடுதலை கட்சியிலும், ஆட்சியிலும் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது’’என்றார்.
மேலும் அவர் கூறியதாவது:-
313 மாணவர்கள்
மருத்துவ கல்லூரிகளில் சேர அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள்ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. இதன் மூலம் 313 மாணவர்கள் பயனடைந்துள்ளனர். கடந்த ஆண்டு 6 மாணவர்கள் மட்டுமே மருத்துவ படிப்பில் சேர்ந்தனர். உள்ஒதுக்கீடு குறித்து பெருமை பேசவில்லை. பெருமை அடைகிறேன்.
நீட் தேர்வு வேண்டாம் என்பதுதான் எங்களின் கொள்கை முடிவு. இந்தியாவிலேயே நீட் தேர்வு வேண்டாம் என எதிர்த்து போராடும் ஒரே மாநிலம் தமிழகம்தான்.
இவ்வாறு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.