மாணவர்களுக்கு கொரோனா ; பள்ளிகளை மூடி அரியானா அரசு உத்தரவு
1 min read
Corona for students; Haryana government orders closure of schools
20/11/2020
அரியானா மாநிலத்தில் மாணவர்கள், ஆசிரியர்களுக்கு கொரோனா பரவியததால் வருகிற 30-ந் தேதி வரை அரசு மற்றும் தனியார் பள்ளிகளை மூட அந்த மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
பள்ளிக்கூடங்கள்
கொரேனாா பரவல் காரணமாக நாடு முழுவதும் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன. பல மாதங்களாக மூடப்பட்டிருந்த பள்ளிகளை மீண்டும் திறக்க மத்திய அரசு அனுமதி அளித்தது. இதையடுத்து, பல மாநில அரசுகளும் தங்கள் மாநிலத்தில் உள்ள பள்ளிகளை திறந்தன. அரியானா மாநிலத்திலும் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டன.
தமிழகம், மும்பை உள்பட சில மாநிலங்களில் கொரோனா தாக்கம் குறைந்து வரும் நிலையில் டெல்லி, கேரளா, அரியானா போன்ற மாநிலங்களில் அதன் தாக்கம் இன்றும் அதிகமாகவே இருக்கிறது.
மாணவர்களுக்கு கொரோனா
அரியானா மாநிலத்தில் கடந்த 2-ந் தேதி முதல் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டது. 9 முதல் 12 வரையிலான வகுப்புகள் மட்டுமே நடந்த அனுமதிக்கப்பட்டுள்ளது. உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வகுப்புகள் நடத்தப்பட்ட போதும் மாணவர்கள், ஆசிரியர்கள் பலருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தற்போதுவரை, அரியானாவில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த 174 மாணவர்களுக்கும், 107 ஆசிரியர்களுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மூட உத்தரவு
இந்த சம்பவம் பெற்றோர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் கொரோனா தொற்று பரவி வருவதால் அரியானாவில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளையும் வருகிற 30-ம் தேதி வரை (நவம்பர் 30) மூட உத்தரவிட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் விதமாக பள்ளிகள் மூடப்படுவதாகவும், பள்ளிகளில் தொடர்ந்து கிருமி நாசினி தெளிக்கப்படும் எனவும் அம்மாநில பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.