நான் தற்கொலை முயற்சி செய்யவில்லை; பூங்கோதை ஆலடி அருணா விளக்கம்
1 min read
I did not attempt suicide; Gardener Alladi Aruna Description
20/11/2020
“நான் தற்கொலை முயற்சி இறங்கவில்லை அப்படி வெளியான செய்தி தவறானது” என்று தி.மு.க. எம்.எல்.ஏ. பூங்கோதை ஆலடி அருணா விளக்கம் அளித்துள்ளார்.
பூங்கோதை ஆலடி அருணா
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ.வாக இருப்பவர் பூங்கோதை ஆலடி அருணாவு. சிவலார்குளம் விலக்கில் உள்ள அவரது வீட்டில் தங்கி இருக்கிறார். இவருக்கு நேற்று ( வியாழக்கிழமை) திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. மயங்கி விழுந்த அவரை திருநெல்வேலி மேம்பாலம் அருகே உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். பூங்கோதை ஆலடி அருணா அளவுக்கு அதிகமாக தூக்க மாத்திரை சாப்பிட்டதாக கூறப்படுகிறது.
திருநெல்வேலி ஆஸ்பத்திரியில் அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டதை தொடர்ந்து அவரது உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது.
அவர் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டதை தொடர்ந்து இன்று அவர் உடல் பரிசோதனைக்காக சென்னை அப்பல்லோ மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
அங்கு அவர் தன்னை டிஸ்சார்ஜ் செய்யுமாறு ஆஸ்பத்திரி நிர்வாகத்திடம் கேட்டார். இதையடுத்து அவர் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
செயல் வீரர் கூட்டம்
பூங்கோதைக்கு கட்சியில் செல்வாக்கு குறைந்து உள்ளது என்றும் கடையத்தில் நடந்த செயல்வீரர்கள் கூட்டத்தில் அவருக்கு உரிய மரியாதை இல்லை என்றும் அதனால் அவர் தற்கொலைக்கு முயன்றார் என்றும் வலைதளத்தில் செய்திகள் பரவியது.
கடந்த சில தினங்களுக்கு முன் பூங்கோதை ஆலடி அருணாவின் சொந்த தம்பி எழில்வாணன் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து தனக்கு கழகத்தில் மேலும் சிறப்பாக செயல்பட பொறுப்புக் கேட்டு கோரிக்கை வைத்தார். இதன் மூலம் அவர்கள் குடும்பத்திலும் ஏதோ அரசியல் தொடர்பான பிரச்சினை ஏற்பட்டு இருக்கலாம் என்றும் கூறப்பட்டது.
தற்கொலை முயற்சி இல்லை
ஆனால் இவை அனைத்தும் தவறு என்று பூங்கோதை ஆலடி அருணா விளக்கம் அளித்துள்ளார். தான் தற்கொலைக்கு முயற்சி செய்யவில்லை என்று விளக்கம் அளித்துள்ளார். அப்படி வெளியான செய்தி தவறானது என்றும் திரித்து கூறப்பட்டுள்ளது என்றும் கூறியுள்ளார்.
தான் ரத்த சர்க்கரை அளவு, ரத்தத்தின் உறையும் தன்மை குறைவு ஆகியவற்றால் மயக்க நிலையை அடைந்ததாகவும் அதற்கான காரணத்தை கண்டறிய சென்னை மருத்துவமனையில் சிகிச்சை பெற்றேன் என்றும் அவர்கூறினார்.