தமிழகத்தில் இன்று 1,663 பேருக்கு கொரோனா; 2,133 பேர் டிஸ்சார்ஜ்
1 min read
Corona for 1,663 people in Tamil Nadu today; 2,133 discharged
21/11/2020
தமிழகத்தில் இன்று புதிதாக 1,663 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று 2,133 பேர் சிகிச்சைக்கு பின் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளனர்.
தமிழகத்தில் கொரோனா
தமிழக்தில் கொரோனா பரவல் பற்றி தினமும் தமிழக அரசின் சுகாதாரத்துறை தகவல்களை வெளியிட்டு வருகிறது. இன்று வெளியிட்ட தகவல்கள் வருமாறு:-
தமிழகத்தில் இன்று (சனிக்கிழமை)1,663 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டு உள்ளது. இவர்களையும் சேர்த்து தமிழகத்தில் இதுவரை கொரோனா தாக்கியவர்களின் மொத்த எண்ணிக்கை 7 லட்சத்து 68 ஆயிரத்து 340 ஆக உயர்ந்துள்ளது.
டிஸ்சார்ஜ்
வைரஸ் தாக்கியவர்களில் இன்று ஒரே நாளில் 2,133 பேர் சிகிச்சைக்கு பின் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இவர்களையும் சேர்த்து தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 7 லட்சத்து 43 ஆயிரத்து 838 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 18 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர். இவர்களையும் சேர்த்து தமிழகத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 11 ஆயிரத்து 586 ஆக அதிகரித்துள்ளது.