June 29, 2025

Seithi Saral

Tamil News Channel

சட்ட விதிகளை மீறி பாகிஸ்தானில் இருந்து 150 கழுகுளை ஏற்றுமதி

1 min read

Export of 150 eagles from Pakistan in violation of legal provisions

24/11/2020

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் நாட்டின் வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தை மீறி 150 அரியவகை கழுகுகளை ஏற்றுமதி செய்ய அனுமதி அளித்துள்ளார்.

கழுகு ஏற்றுமதி

பாகிஸ்தான் அரசு தனது இரு தீவுகளான புண்டல் மற்றும் புடோவை சமீபத்தில் சீனாவுக்கு தாரை வார்த்தது. இப்போது இம்ரான் கான் 150 அரிய கழுகுகளை ஐக்கிய அரபு அமீரகம் ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூமுக்கு ஏற்றுமதி செய்ய இம்ரான் ஒப்புதல் அளித்துள்ளார் என தகவல் வெளியாகி உள்ளது.

இந்த தகவலை பாகிஸ்தான் செய்தி பத்திரிகையான “டான்” வெளியிட்டுள்ளது.
பாகிஸ்தானின் வெளிவிவகார அமைச்சகத்தால் இந்த ஒப்புதல் வழங்கப்பட்டதாகவும், அது ஐக்கிய அரபு எமிரேட் தூதரகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றன.

பாகிஸ்தான் வனவிலங்கு பாதுகாப்பு சட்டங்களின் கீழ் பாகிஸ்தானில் இதுபோன்ற அரிய கழுகுகளை வேட்டையாடுவது தடைசெய்யப்பட்டுள்ளது என்பது தெரிந்ததே, இவற்றையும் மீறி, அவற்றை ஐக்கிய அரபு அமீரகத்திற்கு ஏற்றுமதி செய்ய இம்ரான் கான் அனுமதி வழங்கியுள்ளார்.

பொருளாதாரம்

சர்வதேச சட்டங்களின்படி, அரிய உயிரினங்களின் கழுகுகள் பாதுகாக்கப்பட்ட உயிரினங்கள், எனவே அவற்றை வேட்டையாடுவது மற்றும் வர்த்தகம் செய்வது சட்டவிரோதமாக கருதப்படுகிறது. நம் நாட்டின் பொருளாதார நிலைமைகளை மனதில் கொண்டு, ஒப்பிடமுடியாத, அரிய கழுகுகளை அனுப்ப இம்ரான் கான் அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. பாகிஸ்தான் அனுப்பிய இந்த அரிய வகை கழுகுகள் சவுதி அரேபியாவில் உள்ள வேட்டைக்காரர்கள் தங்கள் வயதான பழைய கழுகுகளை மாற்றுவதற்குப் பயன்படுத்துவார்கள்.

சமீபத்தில் சவுதி அரேபியா கடனாக வழங்கிய 2 பில்லியன் டாலர்களை பாகிஸ்தானிடமிருந்து திரும்பக் கேட்டுள்ளது. ஆனால் இவ்வளவு பெரிய தொகையை திருப்பித் தர பாகிஸ்தானிடம் பணம் இல்லை. எனவே சட்டத்தை மீறி ஐக்கிய அரபு அமீரகத்திற்கு அரிய வகை கழுகுகளை அனுப்பி உள்ளது.
ஐக்கிய அரபு ஆட்சியாளரை மகிழ்விக்க இம்ரான் முடிவு செய்துள்ளார். இருப்பினும், பாகிஸ்தான் அரசாங்கத்தின் இந்த முடிவு உலகம் முழுவதும் கடுமையாக விமர்சிக்கப்படுகிறது.

பாகிஸ்தானுக்கும் ஐக்கிய அரபு அமீரகத்திற்கும் இடையிலான உறவு சமீபத்திய காலங்களில் மிகவும் மோசமான சூழ்நிலையை எட்டியுள்ளது . பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் இஸ்ரேலுக்கு இடையிலான இருதரப்பு உறவை விமர்சித்ததை அடுத்து விஷயங்கள் மோசமடைந்துள்ளன.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.