நெல்லை அருகே போலீசார் முன்னிலையில் தீக்குளித்து பெண் தற்கொலை
1 min read
Woman commits suicide by setting herself on fire in the presence of police near Nellai
24/11/2020
நெல்லை சுத்தமல்லியில் போலீசார் முன்னிலையில் தீக்குளித்து பெண் தற்கொலை செய்துகொண்டார்.
கணவன்-மனைவி தகராறு
நெல்லை சுத்தமல்லி சத்யா நகர் பகுதியைச் சேர்ந்தவர் தர்மராஜ். இருவடைய மனைவி சகுந்தலா(45). இவர்களுக்கு பிரசாத், பிரதீப் என்ற 2 மகன்களும் ஒரு மகளும் உள்ளனர்.
கணவன் – மனைவி இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக சகுந்தலா தனது 2 மகன்கள், ஒரு மகளுடன் தனியாக வசித்து வந்தார். இவரது மூன்றாவது மகன் பிரதீப்பை ஒரு கொள்ளை வழக்கு தொடர்பாக விசாரணைக்கு அழைத்துச் செல்வதாக கூறி சுத்தமல்லி போலீசார் நேற்று அழைத்துச் சென்றனர்.
தொடர்ந்து இன்று (செய்வாய்க்கிழமை) காலையில் வீட்டுக்கு வந்த போலீசார் பிரதீப் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் வீட்டில் பதுங்கி வைத்திருந்த மடிக்கணினியை பறிமுதல் செய்ய வந்துள்ளதாகவும் கூறினார்கள்.
அதன்பின் மற்றொரு மகனான பிரசாத்தையும் விசாரணைக்காக போலீசார் அழைத்துச் செல்ல முயன்றார்கள்.
அப்போது போலீசாார் தனது குடும்பத்தினரை தேவையில்லாமல் விசாரணைக்கு அழைத்துச் சென்று துன்புறுத்துவதாக கூறி சகுந்தலா போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
தீக்குளித்து தற்கொலை
பின்னர் சகுந்தலா வீட்டின் கதவை பூட்டி தீக்குளித்துவிட்டார். இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தகவல் அறிந்ததும் திருநெல்வேலி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் சுத்தமல்லி போலீஸ் நிலையத்திற்குச் சென்று விசாரணை நடத்தினார்.
பின்னர் அவர் அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, சத்யா நகரை சேர்ந்த பிரதீப் கொள்ளை வழக்கில் தொடர்பு இருப்பது தெரியவந்ததையடுத்து கைது செய்யப்பட்டார். தொடர்ந்து அவர்களிடமிருந்து நகை, பணம், மடிக்கணினி உள்ளிட்ட பொருள்களை போலீசார் பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுத்தனர். போலீசார் விசாரணையை முடித்து புறப்படும்போது சகுந்தலா தீக்குளித்து தற்கொலை செய்துள்ளார். இது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.