June 28, 2025

Seithi Saral

Tamil News Channel

இந்தியாவில் ஒரே நாளில் 44,376 பேருக்கு கொரோனா

1 min read

Corona for 44,376 people in onle day in India

25/11/2020

இந்தியாவில் நேற்று புதிதாக 44,376 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா

தமிழகத்தில் கொரோனா பரவல் வெகுவாக குறைந்து வருகிறது. ஆனால் அந்த அளவுக்கு இந்தியா முழுவதும் கொரோனா தாக்கம் குறையவில்லை. ஆனாலும் வழக்கமாக தினமும் 40 ஆயிரத்துக்கம்நேற்றைய தின

இந்தியாவின் கொரோனா பரவல் பற்றிய விவரங்களை மத்திய சுகாதார அமைச்சகம் இன்று காலை வெளியிட்ட தகவல்கள் வருமாறு:-
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் அதாவது நேற்று ( செவ்வாய்க்கிழமை ) ஒரே நாளில் 44,376 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால் இந்தியா முழுவதும் இதுவரை கொரோனாவால் பாதித்தவர்களின் மொத்த கொ எண்ணிக்கை 92,22,217 ஆக அதிகரித்துள்ளது.

481 பேர் சாவு

இந்தயா முழுவதும் நேற்று ஒரே நாளில் 481 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர். இவர்களையும் சேர்த்து கொரோவுக்கு உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 1,34,699 ஆக உயர்ந்துள்ளது.

இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 37,816 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டநிலையில், கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 86,42,771 ஆக உயர்ந்துள்ளது. மேலும் கொரோனா தொற்றுக்கு 4,44,746 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

மேற்கண்ட தகவல்களை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.

பரிசோதனைகள்

இந்தியாவில் இதுவரை 13 கோடியே 48 லட்சத்து 82 ஆயிரத்து 699 கொரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. நேற்று ஒருநாளில் மட்டும் 11,59,032 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்) தெரிவித்துள்ளது.

இந்தியாவில் நேற்று ஒரே நாளில்
இந்தியாவில் இதுவரை 13 கோடியே 48 லட்சத்து 82 ஆயிரத்து 699 கொரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. நேற்று ஒருநாளில் மட்டும் 11,59,032 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்) தெரிவித்துள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.