June 29, 2025

Seithi Saral

Tamil News Channel

இந்தியாவில் ஒரே நாளில் 41,322 பேருக்கு கொரோனா

1 min read

Corona for 41,322 people in onle day in India

28/11/2020

இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 41,322 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டு உள்ளது.

கொரோனா

கொரோனா பரவலில் அமெரிக்காவுக்கு அடுத்து இந்தியா இரண்டாவது இடத்தில் இருக்கிறது. இன்று காலை வரை கடந்த 24 மணிநேரத்தில் அதாவது நேற்று ஒரே நாளில் இந்தியாவில் 41,322 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டு உள்ளது.

இதனால் இந்தியாவில் இதுவரை கொரோனாவால் பாதித்தவர்களின்மொத்த எண்ணிக்கை 93 லட்சத்து 51 ஆயிரத்து 110 ஆக உயர்வடைந்து உள்ளது.

485 பேர் சாவு

நேற்று ஒரே நாளில் நாடு முழுவதும் 485 பேர் கொரோனாவுக்கு இறந்துள்ளனர். நேற்று முன்தினம் மட்டும் 492 ஆக கொரோனாவுக்கு இறந்தனர்.

இந்தியாவில் இதுவரை மொத்தம் 1 லட்சத்து 36 ஆயிரத்து 200 பேர் கொரோனாவுக்கு பலியாகி இருக்கிறார்கள்.
நாடு முழுவதும் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை நேற்று முன்தினம் 4 லட்சத்து 55 ஆயிரத்து 555 ஆக இருந்தது. அது நேற்று 4 லட்சத்து 54 ஆயிரத்து 940 ஆக குறைந்து உள்ளது.

நேற்று மட்டும் 41 ஆயிரத்து 452 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இவர்களையும் சேர்த்து இதுவரை டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 87 லட்சத்து 59 ஆயிரத்து 969 ஆக உயர்ந்து உள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.