June 28, 2025

Seithi Saral

Tamil News Channel

புரெவி புயலால் 6 மாவட்டங்களுக்கு நாளை விடுமுறை

1 min read

6 districts will be closed tomorrow due to the storm

3/12/2020

புரெவி புயல் கரையை கடப்பதையொட்டி நாளை தமிழகத்தில் 6 மாவட்டங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது.

புரெவி புயல்

வங்கக்கடலில் உருவாக புரெவி புயல் நேற்று( புதன்) இரவு இலங்கை திருகோணமலை க்கு வடக்கே கரையைக் கடந்தது. அதன்பின் பாம்பனை நோக்கி நகர்ந்தது. இன்று (வியாழன்) மாலை நிலவரப்படி பாம்பன் அருகில் வந்தது. இதனால் ராமேஸ்வரத்தில் சூறாவளி காற்று வீசியது. தூத்துக்குடி, ராமநாதபுரம் போன்ற மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.

பாம்பன் பகுதியை கடந்து செல்லும் புரேவி புயல் இன்று நள்ளிரவுக்குபின் நாளை அதிகாலை வரை பாம்பன் – கன்னியாகுமரி இடையே கரையை கடக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இதனால் தென்தமிழகத்தில் 5-ம் தேதிவரை கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

விடுமுறை

புரெவி புயல் கரையை கடப்பதையொட்டி கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர், ராமநாதபுரம் ஆகிய 6 மாவட்டங்களுக்கு நாளை (வெள்ளிக்கிழமை) விடுமுறை விடப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
அத்தியாவசிய பணியைத் தவிர மற்ற பணிகளில் உள்ளவர்கள் வீட்டை விட்டு வெளியேற வேண்டும் எனவும் அரசு அறிவுறுத்தியுள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.