புரெவி புயல் இன்று நள்ளிரவு முதல் நாளை காலை வரை கரையை கடக்கும்
1 min read
Buravi cyclone will make landfall from midnight today until tomorrow morning
3/12/2020
புரவி புயல் இன்று நள்ளிரவு முதல் நாளை காலை வரை பாம்பனுக்கும் கன்னியாகுமரிக்கும் இடையே கரையை கடக்கிறது.
புரெவி புயல்
வங்கக்கடலில் உருவான புரெவி புயல் நேற்று இரவு இலங்கையில் திரிகோணமலைக்கு வடக்கே கரையை கடந்தது. அந்தப் புயல இன்று பகல் பாம்பனுக்கு 90 கி.மீ. தொலைவில் மையம் கொண்டு இருந்தது. அது மணிக்கு 12 கி.மீ வேகத்தில் புரெவி புயல் பாம்பனை நெருங்கிக்கொண்டிருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
புரெவி இன்று( வியாழக்கிழமை) மாலை 5 மணி நிலவரப்படி பாம்பனில் இருந்து கிழக்கு-தென்கிழக்கில் 40 கி.மீட்டர் தூரத்தில் நிலைகொண்டு இருந்துது. கன்னியாகுமரிக்கு கிழக்கே- வடகிழக்கே 260 கி.மீட்டர் தூரத்தில் நிலை கொண்டு இருந்தது.
இன்று மாலை பாம்பன் பகுதிக்கு மேற்குப்பகுதியில் அருகில் வந்து, அதன்பின் மேற்கு-தென்மேற்கு நோக்கி நகரும் எனத் தெரிவித்துள்ளது.
புரவி புயல் தமிழகத்தில் இன்று நள்ளிரவு முதல் நாளை காலை வரை பாம்பனுக்கும் கன்னியாகுமரிக்கும் இடையே கரையும் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மழை
புரெவி புயல் காரணமாக நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் 19 செ.மீ., தலைஞாயிறில் 14 செ.மீ. மழை பதிவானது.
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் 13 செ.மீ., குடவாசலில் 10 செ.மீ., திருவாரூரில் 9 செ.மீ., நன்னிலத்தில் 8 செ.மீ. மழை பதிவானது.
கொடைக்கானல் செல்ல தடை
புரெவி புயல் காரணமாக கொடைக்கானலில் சூறைக்காற்றுடன் மழை பெய்யத் தொடங்கி உள்ளது. இதனால் கொடைக்கானல் மலைப்பாதையில் இன்று இரவு 7 மணி முதல் வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
புரெவி புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பேருந்துகள், சுற்றுலா பயணிகள், உள்ளூர் மக்களின் வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. வத்தலக்குண்டு, பழனி, அடுக்கம் சாலையில் வாகனங்கள் அனுமதிக்கப்படாது.
மறு அறிவிப்பு வரும் வரை தடை உத்தரவு நடைமுறையில் இருக்கும் உதவி கலெக்டர் சிவகுரு பிரபாகரன் தெரிவித்துள்ளார்.