June 29, 2025

Seithi Saral

Tamil News Channel

தமிழகத்தில் இன்று 1,416 பேருக்கு கொரோனா; 1,413 பேர் டிஸ்சார்ஜ்

1 min read

Corona for 1,416 people in Tamil Nadu today; 1,413 discharged

3-12-2020

தமிழகத்தில் இன்று புதிதாக 1,416 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டு உள்ளது. இன்று மட்டும் கொரோனாவில் இருந்து குணமாகி 1,413 பேர் டிஸ்சார்ஸ் செய்யப்பட்டு உள்ளனர்.

கொரோனா

தமிழகத்தில் கொரோனா நிலவரம் பற்றி மாநில சுகாதாரத்துறை இன்று மாலை வெளியிட்ட தகவல்கள் வருமாறு:-
தமிழகத்தில் இன்று ‘(வியாழக்கிழமை) 1,428 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. இவர்களையும் சேர்த்து தமிழகத்தில் இதுவரை கொரோனாவால் பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 7 லட்சத்து 86 ஆயிரத்து 163 ஆக உயர்ந்துள்ளது.

1,413 பேர் டிஜ்சார்ஜ்

கொரோனா பாதித்தவர்களில் இன்று மட்டும் 1,413 பேர் சிகிச்சைக்கு பின் குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இவர்களையும் சேர்த்து தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 7 லட்சத்து 63 ஆயிரத்து 428 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனாவுக்கு இன்று ஒரே நாளில் 14 பேர் இறந்துள்ளனர்.இதுவரை மொத்தம் 11 ஆயிரத்து 747 பேர் கொரோனாவுக்கு இறந்துள்ளனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.