June 29, 2025

Seithi Saral

Tamil News Channel

சங்கரன்கோவிலில் போலீஸ்காரரை அடித்து உதைத்த பொதுமக்கள்

1 min read

Civilians beat up a policeman in Sankarankoil

4/12/2020

சங்கரன்கோவில் பஸ் நிலையத்தில் பெண்ணிடம் அத்துமீறி நடந்த போலீஸ்காரரை பொதுமக்கள் அடித்து உதைத்து போலீசில் ஒப்படைத்தனர்.

லத்தியுடன் வாலிபர்

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் பஸ் நிலையத்தில் புறக்காவல் நிலையம் உள்ளது. பஸ் நிலையத்தில் நரிக்குறவர்கள் சிலர் ஊசி, பாசிமணிகளை விற்பனை செய்தனர்.
அப்போது 35 வயதுடைய வாலிபர் ஒருவர் கையில் லத்தியுடன் பஸ் நிலையத்திற்கு வந்தார். அவர் அங்கிருந்த நரிக்குறவ பெண்ணிடம் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

இதை அந்தப் பெண்ணின் உறவினரான மாற்றுத்திறனாளி தட்டிக்கேட்டார். அதற்கு அவரை அந்த வாலிபர் லத்தியால் அடிக் முயன்றார்.

அடி-உதை

இதை பார்த்த பொதுமக்கள் நரிக்குறவப் பெண்ணை அடித்த வாலிபரை தட்டி கேட்டனர். இதில் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் அந்த வாலிபரை பொதுமக்கள் அடித்து உதைத்தனா. பின்னர் கைகளை பின்னால் கட்டி வைத்து அவரை புறக்காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

போலீஸ்காரர்

போலீசார் அவரிடம் விசாரித்தபோது, அவர் மணிமுத்தாறு பட்டாலியனில் போலீஸ்காரராக பணியாற்றி வருவதும், சங்கரன்கோவில் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. பின்னர் போலீசார், அவரை பத்திரமாக பஸ்சில் ஏற்றி ஊருக்கு அனுப்பி வைத்தனர். அவர் குடி போதையில் இருந்ததாக கூறப்படுகிறது.

இந்த சம்பவம் வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.