தமிழகத்தில் இன்று 1,391 பேருக்கு கொரோனா
1 min read
Corona for 1,391 people in Tamil Nadu today
4/12/2020
தமிழகத்தில் இன்று 1,391 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு உள்ளது.
கொரோனா
தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்து வருகிறது. கடந்த சில வாரங்களாக தினமும் 2 ஆயிரத்துக்கும் கீழ்தான் கொரோனா பரவல் உள்ளது. சென்னையில் தொடர்ந்து 48 வது நாளாக பாதிப்பு ஆயிரத்திற்கு கீழ் பதிவாகி வருகிறது.
தமிழகத்தில் கொரோனா நிலவரம் பற்றி இன்று மாலை தமிழக அரசின் சுகாதாரத்துறை வெளியிட்ட தகவல்கள் வருமாறு:-
தமிழகத்தில் இன்று 1,391 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களையும் சேர்த்து தமிழகத்தில் இது வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 7,84,554 ஆக உயர்ந்துள்ளது.
15 பேர் சாவு
தமிழகத்தில் இன்று கொரோனாவுக்கு 15 பேர் இறந்துள்ளனர். இவர்களையும் சேர்த்து தமிழகத்தில் மொத்தம் 11,762 பேர் கொரோனாவுக்கு இறந்துள்ளனர்.
தமிழகத்தில் இன்று மட்டும் 1,426 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.
இதுவரை மொத்தம் 7,64,854 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளனர்.
தற்போது தமிழகம் முழுவதும் 10,988 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
மேற்கண்ட தகவல்களை தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இன்று ஒரே நாளில் தமிழகம் முழுவதும் 70,378 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும், இதுவரை மொத்தம் 1,23,34, 447 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும் தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
சென்னையில்…
சென்னையில் மட்டும் இன்று 356 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டு உள்ளது. இவர்களையும் சேர்த்து சென்னையில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2,16,867 ஆக உயர்ந்துள்ளது.
சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் எந்தெந்த மண்டலங்களில் எத்தனை பேர் சிகிச்சை பெறுகின்றனர் என்ற விவரத்தை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.
அதன் விவரம் வருமாறு:-
கோடம்பாக்கம் – 374
அண்ணா நகர் – 376
தேனாம்பேட்டை – 332
தண்டையார்பேட்டை – 171
ராயபுரம் – 211
அடையாறு- 400
திரு.வி.க. நகர்- 328
வளசரவாக்கம்- 266
அம்பத்தூர்- 305
திருவொற்றியூர்- 75
மாதவரம்- 182
ஆலந்தூர்- 162
பெருங்குடி- 143
சோழிங்கநல்லூர்- 90
மணலியில் – 56