மருத்துவ பணியாளர்களுக்கு முதலில் கொரோனா தடுப்பூசி; மோடி பேச்சு
1 min read
Corona vaccine first for medical personnel; Modi’s speech
4/12/2020
மருத்துவ பணியாளர்களுக்கு முதலில் தடுப்பூசி வழங்கப்படும் என்று அனைத்துக்கட்சி கூட்டத்தில் பிரதமர் மோடி தெரிவித்தார்.
அனைத்துக் கட்சி கூட்டம்
இந்தியாவில் கொரோனா நிலவரம் குறித்து ஆலோசிக்க காணொலி மூலம் அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டினார். இதில் நரேந்திர மோடி பேசியதாவது:-
விலை குறைவான தடுப்பூசி
கொரோனா தடுப்பூசியை உருவாக்கும் முயற்சியில் வெற்றியடைவோம் என நம்முடைய விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்து உள்ளனர் என்றார். இந்த உலகமே பாதுகாப்பான மற்றும் விலை குறைவான தடுப்பூசி மருந்தை பெறுவதில் கவனம் செலுத்துகிறது. அதனால்தான் உலக நாடுகள் இந்தியாவை உன்னிப்பாக கவனித்து வருகின்றன.
இன்னும் சில வாரங்களில் கொரோனா மருந்து தயாராகும் என வல்லுநர்கள் நம்புகின்றனர். விஞ்ஞானிகள் பச்சைக் கொடி காட்டியதும் தடுப்பூசி வழங்கும் பணி இந்தியாவில் தொடங்கும் .
மருத்துவ பணியாளர்கள்
கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் மருத்துவ பணியாளர்கள், முன்கள பணியாளர்கள் மற்றும் தீவிரமான உடல் நோயால் பாதிக்கப்பட்ட முதியவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
கொரோனா தடுப்பூசி விலை தொடர்பாக மாநில அரசுக்களுடன் மத்திய அரசு பேசி வருகிறது.
இந்த விவகாரத்தில் பொதுமக்களின் சுகாதாரத்திற்கு அதி முக்கியத்துவம் கொடுத்து முடிவு எடுக்கப்படும்.
தடுப்பூசியை வழங்குவதில் மத்திய – மாநில அரசுக்கள் இணைந்து செயல்படுகிறது. மற்ற நாடுகளை ஒப்பீடுகையில் தடுப்பூசி வழங்குவதில் இந்தியா சிறப்பான அனுபவத்தையும், திறனையும் கொண்டிருக்கிறது. கொரோனா தடுப்பூசி விவகாரம் தொடர்பாக தங்களுடைய கருத்துக்களை அரசியல் கட்சி தலைவர்கள் தனக்கு அனுப்பலாம். உங்கள் கருத்துக்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும்.
இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.